Sunday, August 9, 2015



விரலின் ஸ்பரிசம் பட்டதும்
இசையாய் தந்திகள் புன்னகைக்க
கடல் அலைகளுக்கு போட்டியாய்
நாத அலைகளும் - காற்றினில்
கலந்து தவழ்ந்து வர
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இசையின் வாசம் தனை
சுவாசிக்க - புறாவும் கூட
பறந்தோடி வந்ததுவோ ?
பொன் நகையினும்
கீற்றுப் புன்னகை அது
நங்கையினை அலங்கரிக்க
அவர்தம் விரல் மீட்டும்
வீணையின் நாதம்
சுற்றத்தையும் வசீகரிக்க
மண் வாசனையும்
நாசிகளை கவர்ந்திழுக்க
இனிமையானதோர் பொழுதின்
எழில் காட்சி  !
இயற்கையின் அழகிற்கோர்
நற்சாட்சி !






5 comments :

  1. படமும் படத்திற்கேற்ற பாவும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...

    வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

    ReplyDelete
  3. வீணையின் நாதம்
    சுற்றத்தையும் வசீகரிக்க// படம்...சொல்லும் நாதம் உங்கல் கவிதையிலும் ஒலித்தது...அருமை...வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இசையால் வசமாகா இதயமெது?

    :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...