Monday, February 22, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

இயற்கையின் கழுத்தை நெரித்து
ஆர்ப்பரித்த ஆறு ஏரியெலாம் பலிகொடுத்து
எக்காளமிட்டு ஏறி ஏறி நிற்கிறோம்
அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஒய்யாரமாய் !
தன் பலம் காட்ட கட்டுடைத்து - இயற்கை
கொட்டித் தீர்த்தது பெருமழையாய் !
நேயம் மரணித்து விட்டதோ - அல்லது
மயக்கமடைந்து எங்கேனும்
மூர்ச்சையாகிக் கிடக்கிறதோ என
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்
புத்துணர்வுடன் உற்சாகத்தோடு
பெருக்கெடுத்தது மனிதநேயம் !
பணம் இங்கே ஊமையாகிப் போக
மனங்கள் உரக்கப் பேசத் துவங்கின !
மதங்கள் அனைத்தும் மறந்து விட
உறங்கிக் கிடந்த மனித நேயம் விழித்தது !
உயர்வு தாழ்வென்பதெலாம் உயிர்களிடத்து மறைந்து
சமத்துவ நிலையை பிரகடணப் படுத்தியது மழை !
பெருக்கெடுத்த நேயம் தொடர்ந்தோடுமா ? - அல்லது
வற்றி வறண்டு விடுமா ?

1 comment :

  1. தொடர்ந்திடுமா அல்லது வற்றிவிடுமா? நல்ல கேள்வி கேட்கும் கவிதை அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...