Sunday, January 22, 2017

வரவேற்போம் புத்தாண்டையே !

குருவி கொத்திச் சேர்க்கும் நெல்மணி போல்
மனதில் நாளும் குன்றிமணியாய் வளர்ந்து 
மனதின் அடியாழம் வரை
வேரோடி நிற்கும் ஆசைக் கனவுகள் !

கனவுகள் நனவாக ஆர்வமதை வித்தாக்கி
முயற்சி தனை நீராக்கி பயிற்சி தனை உரமாக்கி 
எதிர்வரும் தடைகளெலாம் வளர்ச்சிப் படிகளாக்கி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் - வளரும் ஆசை விருட்சம் !

உள்ளத்து எண்ணமெலாம் உயர்வாய் அமைய
எண்ணமதன் பிரதிபலிப்பு செயலில் தெரிய
முயற்சி அளித்த பலனாய் - வெற்றிக் கதவுகள்
திறந்து வழிவிட - காத்துக் கிடக்கும் !

நல்லன எண்ணும் இதயங்கட்கெலாம்
பிறக்கும் நாள் ஒவ்வொன்றும்
புது நாளே ! மாறி வரும் வருடமெலாம்
வசந்தங்களின் வழித்தடங்களே !


பெண்மை இணைய தளம் நடத்திய புத்தாண்டு கவிதை போட்டிக்கு எழுதிய கவிதை.
Related Posts Plugin for WordPress, Blogger...