Friday, April 25, 2014

பிள்ளைக் கனியமுதே ! - 5


கண்ணாடி  தனைப்  பார்த்து 
நீ  சிரிக்க  - உனைப்  பார்த்து 
நான்   இரசிக்க   - எனைக்  கண்டதும் 
கையை  நீட்டியபடியே 
அழகுப் புன்னகை உதிர்க்கிறாயே !


கண்ணாடி  பிம்பம்  தனையே 
உனைப்  போல் மற்றோர் 
கிள்ளையெனக்  கருதி  - மெல்ல 
கண்ணாடியை  முன்னும்  பின்னும் 
திருப்பித்  தான்  பார்க்கிறாயே  !


கலைத்துப்   போட்டு  விளையாடிய 
செப்பை  எல்லாம்  -  நீ 
களைத்து  உறங்கியதும்  ஒழுங்காக்க 
எழுந்ததும்  முதல்  வேலையாய் 
கலைத்து  தான்  விடுகிறாயே !


காலை  எழுந்ததும்  என் 
முகம்  தேடும்  - உன்  ஆவல் 
விழிதனைக்   காணவே 
நீயே  உறக்கம்  கலைந்து 
எழும் வரை  காத்திருக்கிறேன்  !


உன்  ஒவ்வோர்  அசைவிலும்  தான் 
தளர்விலா முயற்சியை 
கண்டு  மகிழ்கிறேனே !
நீயே  எந்தன்  வாழ்வின் 
ஒளியாக   ஆனாயே !


என்   பிள்ளைக்  கனியமுதே !

  

பிள்ளைக்  கனியமுதே ! - 1   பிள்ளைக்  கனியமுதே ! - 2    
பிள்ளைக் கனியமுதே ! - 3    பிள்ளைக் கனியமுதே ! - 4


8 comments :

  1. பிள்ளைக் கனியமுது...

    சுவைக்க இனிது....

    ReplyDelete
  2. கை கால் முளைத்த உயிர் ஓவியம்/

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
  4. அருமையான பாசம் ததும்பும் பிள்ளைக் கவிதை. வாழ்த்துக்களும் நன்றியும் அன்பும் தமிழ் மேம் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி.

      மேம் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். தங்களை விட நான் மிகவும் இளையவள். தமிழ் முகில் என்றே அழையுங்கள்.

      நன்றி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...