Wednesday, March 20, 2019

நிலாக்கால நினைவுகள் !






செல்லும் இடமெல்லாம்
துணையாய் ! - எந்தன்
தனிமை வெறுமை போக்கினாய் !
சற்றே அயர்கையில்
மேகத்தினூடே ஓடியே
கண்ணாமூச்சி காட்டினாய் !
உன் முகம் பார்த்து
கட்டாந்தரையில் தலைசாயக்க
கதை பல பேசியே
கண்ணுறக்கம் ஊட்டினாய் !
இன்பக் கனவுகள் பல தந்து
இன்முகம் மனம் பதிந்து சென்றாயே !
அழகிய வண்ண நிலவே !

இவ்வார தினமணி கவிதை மணி பகுதியில் வெளியானது.

Friday, March 1, 2019

தாமரை




தாமரை இலைமேல்
தெறித்த நீர்த்துளியென
உள்ளக் கமலத்தில் 
மெல்லச் சேர்ந்தழுந்தும்
துன்பச் சுமைகளையும்
ஆத்திர சிலுவைகளையும்
வெறுப்பு மூட்டைகளையும்
வீம்பான பிடிவாதங்களையும்
புறந்தள்ளி - வாழ்வைக் கடக்க
கற்றுத் தேர்ந்தால்
மகிழ்ச்சி எனும் தங்கத் தாமரை
என்றும் நம் வசமே !



இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.
Related Posts Plugin for WordPress, Blogger...