Showing posts with label தடாகம் கலை இலக்கிய வட்டம். Show all posts
Showing posts with label தடாகம் கலை இலக்கிய வட்டம். Show all posts

Friday, July 31, 2015

பொறாமை

பொல்லாத எண்ணமது
சொல்லாதே கொல்லுமது
நிம்மதியை குலைக்குமது
நினைவுகளில் அரிக்குமது -
பொறாமை !

சிறு பொறியாய்
மனதில் விழுந்து
எண்ணம் நினைவெலாம்
எரித்துக் குலைத்திடும்
பொறாமை !

நட்பைக் குலைத்திடும்
நலனைக் கெடுத்திடும்
நிம்மதியை விலையாய்
நிர்பந்தித்து பறித்திடும்
பொறாமை !

பொதுநலன் அழித்திடும்
தன்னலம் பெருக்கிடும்
தன்னைச் சுற்றியே
உலகமதை குறுக்கிடும்
பொறாமை !

தன் சுயமதை அழித்து
நாளும் எதையோ
தேடித்தேடி ஓட வைத்து
அலுத்துக் குலைத்திடும்
பொறாமை !

காண்பதற்கெலாம்
பொறாமைப்படும் மனம்
ஆசைப்படாத ஒன்று
ஏதேனுமிருப்பின் - அது
மரணம் !

பொறாமையை தூக்கிலிடுவோம்
விசாலமான மனமதன்
அடைத்த கதவுகளை
முழுவதும் திறந்திடுவோம் - சுவாசிப்போம்
மகிழ்ச்சியெனும் தென்றலின் தண்மையை !


Related Posts Plugin for WordPress, Blogger...