Tuesday, December 27, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17(மவுனம் , பயிற்சி , கவிதை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17
வார்த்தைகள்:மவுனம் , பயிற்சி , கவிதை

மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து 
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??

http://www.eegarai.net/t75698p285-topic#702536

Friday, December 23, 2011

கவித்துவமான புகைப்படங்கள் - 2

கரையில் நிற்கும்
மரத்தின் பிம்பம்
நதியின் முகத்தில்....
என் மனதிருக்கும்
துன்ப அலைகள்
எவர் அறிவரோ??

வெண்பனி தோழனை
வரவேற்று கட்டித் தழுவ
மரமும் தயாராய்
நிற்கிறதோ??

 மழையின் தண்மையில்
துள்ளியாடி களைப்பு
மேலிட்டதோ??
காளான் குடைக்கடியில்
ஓய்வாக ஒதுங்கியுள்ளதே-
தத்தித் தாவும் தவளை.

பஞ்சுக் குவியலென
பிஞ்சுக் குழந்தையின்
பாதம் - தந்தையின்
கைதனில் புத்தம்
புதியதோர் உலகம்!!
விழி மீன்களுக்கு
இங்கு தூண்டிலிட்டவரும்
எவரோ?? மீன்களின்
அழகதில் மயங்கி
தூண்டிலே இங்கு
வளைந்து நிற்கின்றனவே-
புருவங்களாக!!!

வெற்றி வானும்
தொட்டு விடும்
தூரம் தான்.....
வாழ்க்கைப் பாதையில்
முயற்சிப் பாதம் வைத்து
நடந்தால்!!

கண்ணாடிக் குடுவையும்
சருகில் தன் அழகிய
முகம் பார்த்து மகிழ்கிறது-
ஆதவனின் ஒளியில்!!!
மதுக் கிண்ணமும்
மதுவின் மயக்கத்தால்
மதி மயங்கி நிற்கிறதோ??
உள்ளத்து சோகங்கள்
ஆர்ப்பரிப்புகளுக்கு ஓர்
வடிகால் - அமைதியான
இயற்கையதன் மடிதனில்!!!
http://www.eegarai.net/t76873p15-topic#700186

ஆழிப் பேரலை நினைவாக

பொங்கிவரும் அலையது
கரைவந்ததும் சிறு
கிள்ளை என கால் தழுவி -
நின்றால் உள்ளமதில்
பொங்கும் மகிழ்வு -
ஏனோ இன்றில்லை...
சோகமும் பயமுமே
மனதை பிசைகின்றன....
அந்த நாள் மட்டும்
ஏன் உனக்கு அப்படியோர்
அகோரப் பசியோ??
உன் கரையதில்
ஆடி விளையாடி
களித்திட்டோர் எத்தனையோ...
இன்று உன்னால்
கண்ணீர் சிந்துவோரும்
எத்தனையோ....
நீயும் தான் ஆக்கிவிட்டாய்
திசம்பர் 26ஐ .......எண்ணினாலே
குலைநடுங்கும் நாளாய்-
அனைவரது மனதிலும்!!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=1 

Tuesday, December 20, 2011

ஆகாயப் பந்தல்


ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!

Monday, December 19, 2011

கவித்துவமான புகைப்படங்கள்

விழிகளின் ஓரம்
ஏனிந்த கார்காலம்?
சோக மேகங்கள்
சூழ்ந்திட்டதாலா?? அன்றி
ஆனந்த அருவி
பெருக்கிட்டதாலா??

 நொடிப்பொழுதில்
முத்துக்களென சிதறும்
நீர்த்திவலைகள்....
கண்கள் படம்பிடிப்பதற்க்குள்
நிழற்படமாய் மனமும் கையும்
படம்பிடித்து விட்டனவே !!!
சில்வண்டே......என்ன சிந்தனையோ??
சிவ்வென்று காற்றைக் கிழித்து 
பறக்க எத்தனிக்கிறாயோ?? அன்றி 
இரையதை தேடி...மலரின் விளிம்பதில்
தவமிருக்கிறாயோ??















தாயின் அரவணைப்பதில் தான்
வாழ்ந்திட்டால் - கடந்திடலாமே
எத்துனை தடைகளையும் எளிதாக!!!
அவளது அன்பின் கதகதப்பில்
தட்டிடலாமே வெற்றிவானின்
கதவுகளை நம்பிக்"கை" கொண்டு!!








வாழ்வின் ஒவ்வொரு நாளும்
மலர்கிறது - புத்தம் புதிய
விடியலோடு.....
வரவேற்போம் வசந்தமான
நாட்களை - நம்பிக்கை
மலர்களோடு!!!



Sunday, December 18, 2011

தமக்கு வரும்வரை.........

சக தோழனின் துடிப்பு...
கண்களில் பயமாக
சிலருக்கு .....
கேலியும் கிண்டலுமாய்
சிலருக்கு...
இவையனைத்தும்
தமக்கு வரும்வரை தாம்!!

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 16( மெய் , மீசை , குழி )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :மெய் , மீசை , குழி

பிள்ளையின் குற்றம் கண்டு
தந்தையின் மெய்யுமது விரைப்பாகி
மீசையும் கோபத்தில் துடிதுடிக்க
கையும் பரபரவென்று அடிக்க ஒங்க...
நெஞ்சுக்குழிதனில் எங்கோ
பாசம் வந்து கையை கட்டி விடுகிறது!!!

http://www.eegarai.net/t75698p270-topic#696344

Saturday, December 17, 2011

கண்ணீர்

கயலென கருவிழியிரண்டும்
கண் குளமதில் துள்ளி ஆட
கயலுக்கு தூண்டிலிட்டதும்
யாரோ???
கண் குளமது
கலங்கி நிற்கிறதே!!!

link

Friday, December 16, 2011

முடிந்துபோன பாதை

இது என்ன
முடிந்து போன
பாதையா?? அன்றி
மக்களின் அறியாமையால்
அதிகாரிகளின் அலட்சியத்தால்
முடித்து வைக்கப்பட்ட பாதையா?
இணை கோடுகளாய் நீர் அது
சென்றுகொண்டிருக்க.......
இடைவெளியை ஏற்படுத்தி
விட்டது - மக்களின்
உறவுகளுக்கு இடையில்!!!
மக்கள் மனது வைத்தால்
சீராகாதோ பாதையும் 
தொடர்ந்திடாதோ-  உள்ளத்து உறவுகளும் ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=56 

காதல் போயின்...

காதல் போயின் ???
காதல் போயின்
என்னவாகும்??
ஒன்றும் ஆகப்போவதில்லை.....
ஆம்!! ஒன்றும் ஆகப்போவதில்லை!!
உடனே புதிதாய்
மற்றொரு காதல்
மலர்ந்து விடுகிறது....
ஏனெனில் - ஏதோ
ஒரு எதிர்பார்ப்புகளுடன் தானே
இன்றைய காதல்கள் மலர்கின்றன???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=67 

வார்த்தையிலிருந்து வடி - 15(இலகு ,திரை ,சணல்)

வார்த்தையிலிருந்து வடி - 15
வார்த்தைகள் : இலகு ,திரை ,சணல்

அறிவுத் தெளிவது
உதித்ததும் -அறியாமை
எனும் மாயத் திரை
ல் கொண்டு
கட்டியது போல்
இலகுவாய் அறுந்து
விழுந்ததுவே !!!

 இரும்புத் திரை கொண்டு
மறைத்தாலும் -
இதயத்துக் காதல்
ல்   சாக்கதில் உள்ள
ஓட்டை போல்
கண்கள் வழியாக
இலகுவாய்
வெளிப்பட்டு விடுகிறதே!!!

http://www.eegarai.net/t75698p255-topic#695095


போதும்...போதும்...போதும்

தன் நிலை மறந்து
பிறரை பொல்லாங்கு
சொல்லுவோரின்
வார்த்தைகள்.......
முகத்திற்கு முன்
தேனொழுகும் வார்த்தைகள்
முதுகுக்குப் பின்
கேட்கக் கூசும் சொற்கள் ........
தனக்குத் தான்
பேசும் அதிகாரம்
என்ற ஆணவத்தில்
வளைந்தாடும் நாக்கின்
விஷக் கணைகள்......
இவையனைத்தையும் கேட்டு
காதும் தான் அலறிற்று -
போதும்.....போதும்.....போதும்........
வார்த்தைகளைக் கொட்டிவிடுவது
என்னவோ - சுலபம் தான் !!!
ஆனால் - அதனை
அள்ளுவதென்பது ????
http://www.vaarppu.com/padam_varikal.php?id=3



கடிகாரம்

இரு கைகொண்டு
உலகையே
கட்டி ஆளும்
சக்ரவர்த்திகள் !!!
நம் வாழ்வின்
பயணமென்பது-
முன்னோக்கியே
இருக்க வேண்டுமன்றி
பின்னோக்கி அல்ல
என்ற உயர் தத்துவத்தை
உணர்த்திக் கொண்டே
இருக்கும் செயல் வீரர்கள் !!!
வாழ்வதில் எத்தடை வரினும்
நாம் கொண்ட
லட்சியப் பயணத்தில்
முன்னேறிக் கொண்டே
இருக்க வேண்டுமென்பதை
உணர்த்தும் ஆசான்கள் !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=20

Thursday, December 15, 2011

வார்த்தையிலிருந்து வடி - 14(பசி , முல்லை , காகிதம் )

வார்த்தையிலிருந்து வடி - 14
வார்த்தைகள் : பசி , முல்லை , காகிதம்


 முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??

http://www.eegarai.net/t75698p240-topic#694364 

Wednesday, December 14, 2011

ஏமாற்றம்

தேடல்கள் மற்றும்
எதிர்பார்ப்புகளின் 
எல்லைகள் பறந்து
விரியும் போது
ஏமாற்றம் என்பது
மனதில் பிறக்கும்
அநியாய ஆசைகளுக்கும்
பேராசைக்கும் ஓர்
தடைக்கல்லாய் அமைகிறது !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=70 

2011 விட்டுச்சென்ற...


2012 என்றில்லை...
எல்லா ஆண்டுகளும்
நம்முள் ஏதோ ஓர்
புதிய உந்து சக்தியை
ஏற்படுத்தத்தான் செய்கின்றன !!!
நாம் கடந்து வந்த
ஆண்டுகளில் - வசந்தங்களும்
புயலும் மாறி மாறி
வந்து கொண்டே தான் இருந்தன...
இனியும் அவ்வாறே இருக்கும்..
ஏனெனில்....இன்பமும் துன்பமும்
கலந்ததன்றோ வாழ்க்கை ????
2011 நம்முள் விட்டுச் சென்ற
இன்பங்களை - என்றும் அழியா
நினைவுகளில் கொள்வோம் !!!
துன்பங்களை தோல்விகளை
பாடங்களாய் அனுபவங்களாய்
மனதில் கொள்வோம் !!!
வரவேற்போம் எதிர் வரும்
புத்தாண்டை புன்னகையோடு !!!
புதிய நம்பிக்கையோடு !!!
நம்புவோம் - புத்தாண்டு
கொண்டு வரும்
அனைவரது வாழ்விலும்
வசந்தங்கள் பலவென்று  !!!
வேண்டுவோம் - புத்தாண்டு
அனைவரது உள்ளத்து நீண்டநாள்
கனவுகள் ஆசைகளை
நிறைவேற்ற வேண்டுமென்று !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=78 

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 13(பகை, மேகம்,கலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :பகை, மேகம்,கலை

உள்ளமதில்
திரண்டெழும்  பகை
மேகமதை கலைத்தாலே
தெரியுமே - உறவு வானம்
தெளிவாக !!!
 http://www.eegarai.net/t75698p210-topic

Tuesday, December 13, 2011

எண்ணப் பிரதிகள்

மனிதனின்
மன எண்ணங்களை
பிரதியெடுக்கும் அளவிற்கு
தொழில்நுட்பம்
வளர்ந்துவிட்டதா என்ன ??
ஒரு தனி மனிதனது
எண்ணங்களில்
உதித்த கவிதைகள்
அச்சில் வார்த்தது போல்
சிறு மாற்றம் கூட இல்லாது
வெவ்வேறு கவிஞர்களின்
பெயர்களில்
இணையத்தில் விரவிக்
கிடக்கின்றனவே !!!

ஒருவரது எண்ணமதில்
உதிக்கும் கவிதை
ஒரு பெண்ணின்
கருப்பையில் உதிக்கும்
கருவைப் போன்றது.....
கருவைத் திருடும்
கயவர்களே......
உங்களுக்கு என்ன
தண்டனை
கொடுத்தால் தகும்??

http://eluthu.com/kavithai/50054.html 

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 12(நாடு, பிரம்பு, கருங்கல் )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :நாடு, பிரம்பு, கருங்கல்

நாட்டின் நலனதை
நாடினால் தான்
தமக்கு வாழ்வென்பதை மறந்த
கருங்கல் இதயங்களுக்கு
எந்தப் பிரம்பால் அடித்து
புரிய வைப்பது ???

http://www.eegarai.net/t75698p195-topic#692916

Monday, December 12, 2011

குடை

அலை மோதும்
கடலின் கரையதில்
உள்ளங்கள் மோதிக்
கொண்டதோ??
மோதலின் அடையாளமாய்
குடையும் நிலைகுலைந்து
நிற்கிறதே?????

http://www.vaarppu.com/padam_varikal.php?id=18 

Sunday, December 11, 2011

விடுமுறை நாளொன்றில்........


இயற்கையிலோர்
அற்புத நிகழ்வு -
அலைகடலும் செவ்வானமும்
மாலைப் பொழுதில்
ஓய்வாய் கைகோர்த்து
நடை பழகுகின்றனவே .......
வானவில்லுக்கும் இன்று
விடுமுறை நாளோ?
கடற்கரையில்
ஓய்வெடுக்க வந்துள்ளதே !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=75 

வார்த்தையிலிருந்து கவிதை வடி-11(அழுக்கு,முயற்சி, கயிறு )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-11 
வார்த்தைகள் : அழுக்கு,முயற்சி, கயிறு

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

http://www.eegarai.net/t75698p180-topic#691213

வார்த்தையிலிருந்து கவிதை வடி-10(வழக்கு , அணை , தலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி........
வார்த்தைகள் : தலை,அணை,வழக்கு


தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??

http://www.eegarai.net/t75698p150-topic

Friday, December 9, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-9(சிலை , தென்றல் , பூச்சி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-சிலை , தென்றல் , பூச்சி

தென்றலாய் காற்றது
தாண்டிச் சென்றாலும்
வெயில் மழை என
எக்காலத்தும்
உலக உயிர்களை - அது
சிறு பூச்சியாயினும்
இடமளித்து காத்து
நிற்கிறார் - சிலையாய்
அரசமரத்தடி பிள்ளையார் !!!

http://www.eegarai.net/t75698p135-topic#689639

Wednesday, December 7, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-8 (கடல்,சிகப்பு,கணக்கு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-கடல் ,சிகப்பு ,கணக்கு 

வானும்  கடலும் 
ஒன்றானதோ -
எனுமளவுக்கு சூரியனவன்
தன் ஒளியால்
வான வீதியையும்
அலைமோதும் கடலதையும்
சிகப்பாக்கிய அழகில்
மனது லயிதிருந்தாலும் -
என் காதலியே...
மனமது நீ வரும் நேரமதை
கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!

http://www.eegarai.net/t75698p120-topic#688169

Tuesday, December 6, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-7 (சோறு , கோல் , பாறை )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - சோறு , கோல் , பாறை


அன்னையவளும் தன்
கிள்ளைக்கு சோற்றை...
கையில்   கொண்டு 
ஊட்டுகிறாள் 
பாறை போன்ற 
அசையா நம்பிக்கையும் 
உடன் குழைத்து .....
கிள்ளையாய்  தவழும் போதே 
அடித்தளமாய்   -
பிள்ளை வெற்றிக் கோலேந்தி
உலகை வலம் வர!!! 


http://www.eegarai.net/t75698p90-topic#687383

Monday, December 5, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-6(இதயம் , களிமண் ,செருப்பு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -இதயம் , களிமண் ,செருப்பு 

செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!


http://www.eegarai.net/t75698p75-topic#686530

Sunday, December 4, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-5(பெண் , சிலுவை , கடிகாரம் )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -பெண் , சிலுவை , கடிகாரம் 

பொறுப்புச் சிலுவையை 
சுமையாய் கொள்ளாது
சுகமாய் எண்ணி 
கடிகாரமென -
நொடிப் பொழுதும் 
நில்லாது - தனது
பொறுப்புணர்ந்து 
தனது வாழ் நாளெல்லாம்
ஓடிக் கொண்டிருக்கிறாள் -
பெண்!!! 

http://www.eegarai.net/t75698p45-topic#686025 

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-4(விலங்கு , புறா , கொடி.)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -விலங்கு , புறா , கொடி.


விலங்கென மாறி 
தன்னிலை மறந்து
தடுமாறும் நேரமதில் 
உள்ளமதில் வன்மம் கூடி 
வெறுப்புமது நெஞ்சில் 
கொடியாய் படர 
அறியாமை இருளும்
கண்களை மறைக்க 
அன்பின் வடிவாய் 
தியாகச் சின்னமாம் 
வெண் புறாவாய்
சமாதானம் இணைக்குமே
உலகத்து உறவுகளை 
அன்பு  கொண்டு!!!

http://www.eegarai.net/t75698p45-topic#686023

 

Friday, December 2, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-3(முடி , கதவு , வெளிச்சம்)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -முடி , கதவு , வெளிச்சம் .

 முகிலென மங்கையவள்
முடியும் அலைபாய
வான வீதியில்
உலாவந்த சந்திரன்
சாளரக் கதவருகே
வெளிச்சம் பரப்பி
வானத்து முகிலது
மனையினுள் சென்றதோ
என்றெண்ணி.....
தனைமறந்து நிற்கின்றான்.....

http://www.eegarai.net/t75698p30-topic#685281 

Thursday, December 1, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-2 (குரங்கு,கண்ணாடி,மணி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - குரங்கு , கண்ணாடி , மணி (பெல்)

 மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
http://www.eegarai.net/t75698p15-topic

Wednesday, November 30, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-1(மாடு,கிளி,பெட்டி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - மாடு, பெட்டி, கிளி


மாடு போல் உழைத்து
செல்வத்தை தன்
இரும்புப் பெட்டியிலும்
அன்பினை தன்
இதயப் பெட்டியிலும்
வைத்துப் பாதுகாத்தார்
தந்தை - தான்
கிளியென வளர்த்த
தன் மகளுக்காக!!!

http://www.eegarai.net/t75698-topic#684164 

கடற்கரையில் ஒரு கோடை மாலை


யாரப்பா அங்கே.....
சூரிய தேவனவன்
ஓய்வெடுக்கச் செல்கிறான்....
வழியனுப்ப வாருங்களேன்...
நாள் முழுதும் அயராது
தன் ஒளிக் கதிர்களால்
சுட்டெரிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடித்து
அயர்ந்து போய் -
தன் சூட்டையெல்லாம்
ஆழியினுள் அழுத்தி
ஆழி நீரையும்
அகன்ற வானமதையும்
செம்மையாக்கி விட்டு
நித்திரைக்குள் மூழ்குகிறான்
சூரிய தேவனவன்.........
வாருங்கள் - வரவேற்கத்
தயாராவோம்.....தன்மையை
தன்னகத்தே கொண்ட
சந்திர  தேவனை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=73

தண்ணீர்.


காற்றது இட்டுச் செல்ல
மேகப் பெண்ணவள்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடுகிறாளோ???
அந்த நாட்டிய அரங்கத்தில்
நீர்த் தோழியும்
மேக மங்கைக்கு துணையாய்
கைகோர்க்கிறாள்!!!
அற்புத நாட்டியத்தைக்
கண்டு கழிக்க அங்கே
வந்து விட்டான்-
வருண தேவனும்!!!
அண்ணலது வரவால்
குளிர்ந்தது - நானிலமெங்கும்!!!
நிறைந்தது - வாழ்வும் வளமும்!!!

Sunday, November 27, 2011

மலையளவு நம்பிக்கை

உலகின் உயரமான மலையிலிருந்து
வந்தேன்-உலகின் குள்ளமான மனிதன்
எங்கள் நேபாளத்தின் அரசுத் தூதுவனாய்.....
உயரம் குறைவாய் இருப்பதாய்
என்றும் நெஞ்சில் குறையிருந்ததில்லை....
உள்ளத்தில் இருக்கிறது நம்பிக்கை-
எங்கள் தேசத்தின் உயரமான மலையளவு!!!

http://www.eegarai.net/t72755p180-topic#682103

குதிகால் செருப்பழகி


அடி குதிகால் செருப்பழகியே....
உன் வீட்டில் என்ன
தஞ்சம் தாண்டவமாடுகிறதோ?
அரை ஜான் உயரமான
நான் கூட -  உச்சி முதல்
பாதம் வரை
ஆடை அணிந்திருக்க....
ஆறடி உயரமான உனக்கு
உன் முழங்கால் மறைக்க
ஆடை கிடைக்கவில்லையோ??

http://www.eegarai.net/t72755p180-topic#682101


Sunday, November 20, 2011

விதையிலிருந்து......


விதையாய் பூமிதனில்
விழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
http://pullaankulal.blogspot.com/2011/11/5.html#comment-form

மழைத் தாய்க்கு ஓர் நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!


மழைக்கு கறுப்புக்
குடைதனை
கொடியாகக்  காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத்  தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!!
http://pullaankulal.blogspot.com/2011/11/6.html#comment-form


Wednesday, November 16, 2011

உறுதியாய் இரு...


உலகம் - இது ஓர்
சதுரங்கக் கட்டம்!!!
நம்மைச் சுற்றி
எத்தனை எத்தனையோ
இராஜாக்கள்....இராணிகள்....
மந்திரிகள்....யானைகள்......
குதிரைகள்.....சிப்பாய்கள்....
பல்வேறு வடிவங்களில்....
பல்வேறு நிறங்களில் ...
ஓர் பெரும் இராஜாங்கமே நடக்கிறது....

சதுரங்கக் கட்டத்திலோ 
இரு வேறு நிறங்கள் மட்டுமே!!!
ஆனால் உலகச் சதுரங்கதிலோ....
எத்தனை எத்தனையோ நிறங்கள்....
இராஜாங்கத்தில் -

எண்ணங்களால் உயர்ந்தோரும் உண்டு....
தம் செயல்களால் தம்மை
தாழ்த்திக் கொண்டோரும் உண்டு.....
பார்த்து பொறுமையாய் -
நிதானமாய் அடியெடுத்து வைப்போம்......
எண்ணத்தில் மேன்மை கொண்டு -
உள்ளத்தில் உண்மை கொண்டு
பெருமையாய் நிமிர்ந்து நிற்போம்.....
நம் கண்ணியமான உழைப்பின் துணை கொண்டு!!!


http://www.vaarppu.com/padam_varikal.php?id=68 

மின்னல்

மேகத் திரை விலக்கி
வனிதையவள் வானத்து
வீதிகளின் அழகினை
ரசிக்கிறாளோ??
அவளது பார்வையின் ஒளி
மின்னலென பளிச்சிடுகிறதோ???
அன்றி - அவளது குமுதவாய் மலர்ந்து
புன்னகை பூக்கிறாளோ??
வெண்பற்கள் முத்துக்கள் என மின்னி
மின்னலாய் கண்ணைப் பறிக்கின்றனவோ!!!
http://eluthu.com/kavithai/46174.html 

Tuesday, November 15, 2011

சமாதானம்


ஹிம்சையால் ஆகாததை
அஹிம்சை கொண்டு
சாதிக்கும் அற்புதம் -
சமாதானம்!!!
சமாதானம் - இது
உடைந்த உள்ளங்களை
ஒன்று சேர்க்கும் ...........
வெறுப்பு எரிமலைகளை
அன்புப் பனிமலைகளாக்கும்!!!
இதயக் கேணியில்
மனிதநேயம் ஊற்றெடுக்கும்!!!
நேயம் மலரச் செய்யுமே
வேற்றுமையில் ஒற்றுமை!
ஒற்றுமை வளர்க்குமே -
பலமான நல்லுறவு!
நல்லுறவில் மேலோங்கும்-
உள்ளத்து அமைதி!
அமைதியின் மடிதனில்
ஜனிக்கும் - அன்பு உலகம்!!!!
http://eluthu.com/kavithai/46175.html 

Saturday, November 12, 2011

பனித்துளி

இலை மகளுக்கு
இயற்கை அன்னை
சூடிப் பார்க்கும்
வைர ஆபரணம்-
பனித் துளி!!!
ஆதவனின் ஒளி பட்டு
ஜொலிக்கிறது!!!
http://eluthu.com/kavithai/35985.html 

Friday, November 11, 2011

மறப்போம்.... மன்னிப்போம்!!!



உமக்கு மூச்சுக் காற்றை யாம் தந்தோம்
எம்மை மரிக்கச் செய்து அடுப்பெரித்தீர்!!
மழை வர யாகம் என்று
எம்மையே நெருப்பிலிட்டீர்!!!
உமக்கு நிழல் தந்து நாங்கள் காய
எமக்குப் பரிசாய் எங்கள் உடலில் -
உமது பெயர்க் காயங்களை விட்டுச் சென்றீர்!
வாழும் போதும் உங்களை வாழ வைத்தோம்
வீழ்ந்த பின்னும் உமக்கு செல்வமளித்தோம்!
ஆயிரம் அநீதி எமக்கு நீரிழைத்த போதிலும்
எமது கொள்கை  என்னவோ -
"மறப்போம் மன்னிப்போம்".....
தொடர்கிறது எமது சேவைப் பணி!!!
இனியேனும் உணர்ந்து செயல் படுவீர்..
உள்ளத்து உறுதி கொள்வீர் -
உலக வெப்ப மயமாதலை தடுத்திட
என்றும் எம்மைக் காத்து
உலக நலம் பேணி
நலமாக வளமாக வாழ்ந்திட !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=77

Thursday, November 10, 2011

காலடிச் சுவடு


 கடற்கரை மணலில்
பதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து  வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!


குழலோசை-2

கள்ளமில்லாச் சிரிப்பு


நீரும் இங்கு குதூகலிக்கிறதோ???
கொள்ளை கொள்ளும் உன் 
கள்ளமில்லாச்   சிரிப்பைக் கண்டு!!!

குழந்தையின் வார்த்தைகள்


உன் உயிருள் நான் உதித்தேன்.....            
உன்னுள் நான் வாழ்ந்தேன்.........
உன் அன்பின் ஸ்பரிசங்களில் 
பாதுகாப்பை உணர்கிறேன்.....
என்றும் உன் -
தூய உள்ளத்து அன்பை
உறுதுணையாய்க்  கொண்டு 
வலம் வருவேன் உலகினையே-
வெற்றித் திருமகனாய்!!!
குழலோசை-3
              

நோயற்ற வாழ்வுக்கு...



இயற்கையுடன் இயைந்த வாழ்வு 
அது தருமே நிறைவான மகிழ்வு 
நோயும் நொடியும் தான் அஞ்சுமே
எழில் கொஞ்சும் பல்வகை 
பழங்களை நாம் புசித்தால்..............
புசித்துப் புசித்து பசியை 
மறப்பதை விட - பசித்த 
வேளையில் புசிப்போம்!!!
இயற்கையில் எத்தனை 
வண்ணங்கள் -
அவையனைத்தும் பிரதிபலிக்கும் 
மலர்களும் கனிகளுமாய்......
அவை தருமே  
உடல் - உள்ளத்தை 
வலுவாக்கும் சத்துக்கள்!!
காத்திடுவோம் இயற்கையை 
வழிவகித்திடுவோம்-
நோயற்ற வாழ்வுக்கு!!!
  http://www.vaarppu.com/padam_varikal.php?id=74

Wednesday, November 2, 2011

பாசம்


ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
http://www.eegarai.net/t72755p180-topic
http://www.higopi.com/ucedit/Tamil.html

புதுமைப் பெண்

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!
http://www.eegarai.net/t72755p165-topic

இளமை மாறாக் காதல்


தனிமையிலே  நாமிருக்க 
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க‌ -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி  நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்-
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
http://www.eegarai.net/t72755p165-topic 

Monday, October 31, 2011

வானவில்

வான வீதியில்
வண்ணத் தேரென 
கம்பீரமாய் 
வளைந்தோடும் வானவில்!
தேரை ஓட்டிச் செல்ல 
தேரோட்டியும் இல்லை-
இட்டுச் செல்ல 
ஏழ்குதிரைகளும் இல்லை-
சூரியனின் வரவை ஒட்டி 
வான வீதிகளில்
அமோக வரவேற்பு!!
மழை மேகங்கள்
பன்னீர் தெளிக்க 
வானவில்லின் 
வண்ணக் கோலங்கள்!!!  
http://eluthu.com/kavithai/45062.html 

Friday, October 28, 2011

மனக்கனவுகள்

கனவுகள்.....
மனதினில் அன்றாடம் 

ஆயிரமாயிரம் கனவுகள்.......
வாழ்வினை வழிநடத்தும்
லட்சியக் கனவுகள்.....
நம்பிக்கை நம்
மனதில் விதைத்த
வெற்றிக் கனவுகள்.....
எதிர்காலம் நம்
உள்ளத்தில் வளர்த்த
ஆசைக் கனவுகள்......
கனவுகள் -
என்றென்றும் நம்மை
வழிநடத்தும் ஒளி விளக்குகள்!!!!
கனவு காண்போம்.....
நம் தேசத்தின் வளமான
எதிர்காலத்தை
மனதில் கொண்டு.....
கனவுகள் - எண்ணங்களாகும்!!
எண்ணங்கள் - செயல்களாகும்!!
செயல்கள் - முயற்சிக்கு வழி காட்டும்!!
முயற்சி - வெற்றிக்கு வழி வகுக்கும்!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=76

காதல்

உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!

Wednesday, October 19, 2011

மேகக் கூட்டம்......


வானில் எவரேனும்
பருத்தி ஆலை
நிறுவி உள்ளனரோ???
பஞ்சுப் பொதிகள்
வரிசை வரிசையாய்
செல்கின்றனவே!!!!

பணம்

 










வெற்றுக் காகிதமெனில்
துச்சமென எண்ணக் கூடும்.......
அதற்கே மதிப்பு கூடி
பணம் என ஆகையில்
கண்ணில் ஒற்றிக் கொள்ளத்  தோன்றும்!

பணம் வந்த  நொடியில் 
உலகையே  நம் சுற்றமாக்கும்....
ஆனால்.....
செல்லும் நொடியிலோ
நம்மை தனிமரமாக்கும்.......

உள்ளங்களின் நிறத்தை 
உறவின் அடையாளத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டும்
மாய விளக்கு.....பணம்!!!





Monday, October 17, 2011

மெல்லிறகு


காற்றில்  மிதந்து  வந்து
கண் முன் நடனமாடி
உன் கவனம் கலைக்கிறேன்......
உள்ளம் துவண்டு விடாது
முயற்சிக்கத்  தூண்டுகிறேன்......
உன் கைதனில் தஞ்சமடைந்து
உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
முயற்சியின் அருமையை
உணர்த்துகிறேன்.........
மென்மையாய்  வருடிச்  சொன்னது ........
Related Posts Plugin for WordPress, Blogger...