Showing posts with label காற்று வெளி இதழ். Show all posts
Showing posts with label காற்று வெளி இதழ். Show all posts

Thursday, July 11, 2013

மழை மறியல் எதற்கு ?




மண்மகளின்  தாகம்  தீர்க்க
முகிலன்னையும்  நீர்தனை
மழையெனப்   பொழிகின்றாள் !
சுட்டெரிக்கும்  சூரியனவனால்
நாவறண்டு  தவித்த  மண்மகளோ
நீரினை  சட்டென்று  உள்வாங்குகிறாள் !
தாகம்  தீர்த்தமைக்கு  நன்றியாக
மண்  வாசனை  தனையும் – மண்மகள்
காற்றினில் பரப்பிடுகிறாள் !
நீர்த்துளிகள்  தன்மேல்  பட்டதோ
தண்மையும்   தான்  புத்துணர்வளித்ததோ  என்று
மரங்களும்  காற்றில்  தலையசைத்தாடுகின்றன !
செடிகளும்  கொடிகளும் 
மலர்களும்  மெளவல்களும்
புதுப்பொலிவுடன்  புன்னகைக்கின்றன !
வராத  விருந்தினர்  எவரோ
வந்துவிட்டது   போன்றொரு   உற்சாகத்தில்
பாடித்  திரிந்தன  தவளைகள் !
சிறு  பூச்சியும்  புழுவும்  மழையில்
நனைந்திடக்   கூடாதே  என்று  அக்கரையுடன்
குடையாய்  முளைத்தன  காளான்கள் !
மழையின் வரத்திற்காக  தவமியற்றிய
வித்துக்களும்  மெல்ல  மண்னை
முட்டிக்கொண்டு  உலகை  எட்டிப் பார்த்தன !
மழையின்  பாடலுக்கு  மெட்டமைக்க
ரீங்கார  இராகங்களைப்  பாடி
உற்சாகமாய்த்  துள்ளித்  திரிந்தன  சில்வண்டுகள் !
இயற்கை  வரவேற்பளிக்குது -   மழைக்கு
கோலாகலமாய்  உற்சாகத்துடன் !  - மனிதர்களே !
விதிவிலக்காய்  குடைகாட்டி  மழை மறியல் எதற்கு ? 

நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html




Monday, May 6, 2013

வாழ்க்கை



வருண தேவனின்  அனுக்கிரகம் தான்
அளவில்லாமல் நிறைந்திருக்கு !!!
காலமெல்லாம் எம் வாழ்க்கையும் தான்
தண்ணீருடன்  இணைந்து இருக்கு !!!
படகும் எம் வாழ்வின் ஆதாரமாக
விவசாயம் தொடங்கி வியாபாரம் வரை
அன்றாட வாழ்வும் தானிங்கு நடக்குது !!!
வீடுகளும் தான் மேடையேற
அமைதியான வாழ்வும்
நிம்மதியாய் அரங்கேறுது !!!
குழாய்களும் இங்கில்லை - குழாயடி
சண்டைகட்கு நேரமில்லை !!!
ஜாதிகள் இங்கில்லை - ஆதாய
அரசியலுக்கோர்  வாய்ப்புமில்லை !!!
காரேறி வர அரசியல்வாதிக்கு
வழியும் தானில்லை !! - படகேறி வர
ஒருவரும் எத்தனிப்பதுமில்லை !!!
சாலை மறியலுமில்லை - காத்துக்
கிடக்க வைக்கும் போக்குவரத்துமில்லை !!!
ஏமாற்றும் மனமுமில்லை -
ஏற்றமான வாழ்வுக்கு குறையுமில்லை !!!
இயற்கையுடன் இயைந்த
வாழ்வும் தான்
இன்பமயமாய் நடக்குது -
இறைவனின் துணையுடன் !!! 

Related Posts Plugin for WordPress, Blogger...