Friday, September 6, 2019

நட்பு என்பது யாதெனில்...


பிரதிலிபி நடத்தும் இருவேறு போட்டிகளில் எனது படைப்புகள். 

பயணங்கள் முடிவதில்லை என்ற போட்டிக்கான எனது படைப்பு


மாமழை என்ற மழை குறித்து கவிதை எழுதும் போட்டிக்கான படைப்பு


நட்புக்கள் வாசித்து உங்களது கருத்துகளை பகிருங்கள். நன்றி.
 



Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.
Related Posts Plugin for WordPress, Blogger...