கவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இருந்து உருவாக்கிய நூல்
உலகம் - தன் வாய்க்கு கிட்டியதெல்லாம்
அவலென மென்றிடும் !!!
அது நன்மை தீமை பாகுபாடு
அறிந்ததுமில்லை - அதை
அறியும் எண்ணம் என்றும்
அதற்கு இருந்ததும் இல்லை !!!
முகத்திற்கு முன்
ஆயிரமாயிரம் துதிகள் ......
முதுகுக்குப் பின்னோ
விழுந்திடும் மிதியடிகள் !!!
ஆக - வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
ஏற்க வேண்டும் சொல்லடிகள் !!!
சபைதனில் அறிந்ததை
வெளிப்படுத்தினால் - தற்பெருமை என
தப்புக் கணக்கிடும் !!!
மௌனமாய் இருந்தாலோ
ஏளனப் பேச்சில்
நம்மை ஏய்த்திடும் !!!
இலட்சியங்கள் பல தோன்றி
கனவென வீழ்வதும்
கனவுகள் பல தோன்றி
நிலையாக வாழ்வதும்
மானுடர்களின் -
உலக வாழ்வில் தாம் !!!
