Showing posts with label pratilipi. Show all posts
Showing posts with label pratilipi. Show all posts

Friday, September 6, 2019

நட்பு என்பது யாதெனில்...


பிரதிலிபி நடத்தும் இருவேறு போட்டிகளில் எனது படைப்புகள். 

பயணங்கள் முடிவதில்லை என்ற போட்டிக்கான எனது படைப்பு


மாமழை என்ற மழை குறித்து கவிதை எழுதும் போட்டிக்கான படைப்பு


நட்புக்கள் வாசித்து உங்களது கருத்துகளை பகிருங்கள். நன்றி.
 



Saturday, May 7, 2016

யாதுமாகி நின்றாள் !

விரல் ஸ்பரிசம் தாளமாக
இதயத் துடிப்பும் இராகமாக
நாதமாய்  வாழ்வெனும்
அத்தியாயத்தின் ஆரம்பமாய் - தாய் !

முறைத்துக் கொண்டு நின்றாலும்
சற்று நேரத்திற்கெல்லாம்
மறந்து விட்டு - உடன் பிறப்புக்காய்
வாதாடி நிற்கும் - சகோதரி !

உதிரத்தால் உறவன்றி - கள்ளமிலா
பாசத்தால் பிறந்திட்ட உறவாய்
இதயமதில் எந்நாளும் தனியிடம்
கொண்டுவிட்ட உறவாய் - தோழி !

கொண்டவனின் வாழ்வு தனில்
உயர்வுதனை கொண்டாடுகிறாரொ இல்லையோ
தாழ்வு தனில் நம்பிக்"கை" எனும் தூண்டுகோலாய்
நிமிரச் செய்யும் மனைவி !

 ஒற்றைப் புன்னகையும் இதழ் வார்த்தையும்
இதயம் தனை கொள்ளை அடித்திட -
கொள்ளை போனதை மீட்டுக்கொள்ள
எண்ணம் வருவதே இல்லை - கொள்ளையடித்தவள்
மகளன்றோ !

மனித வாழ்வுதனில்
ஜனனம் துவங்கி மரணம் வரை
துணையாய் துணிவாய்
யாதுமாகி நிற்கின்றாள் - பெண் !


குறிப்பு :

ப்ரதிலிபி நடத்திய யாதுமாகி நின்றாள் - மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை.

Tuesday, March 22, 2016

கொண்டாடப்படாத காதல்




உந்தன் முகம் காண
பொழுதெலாம் உளந்தனில்
ஏக்கம் ! - எண்ணமெலாம்
உன் நினைவலைகளின்
தாக்கம் ! - என்ன மாயமிதோ ?
சலனமற்றுக்  கிடக்கும்
குளம்  போலத்தான்
அமைதியாய் இருந்தது மனம் !
உந்தன் சிறுகீற்றுப் புன்னகையும்
அதில் வழிந்தோடிய
அன்பும் அக்கறையும்
தெளிவான மனமதில்
சற்றே கல்லெறிந்து பார்க்க
குபுக்கென உள்ளந்தனில்
கொப்பளித்தது காதல் !
பொங்கிய காதலை
பொங்காது பொறுமையாய்
கடிதத்தில் பொக்கிஷமாய்
பொத்திக் கொடுத்தது
உனக்கு விளங்கவில்லையோ ?
காகிதத்தை கசக்கி எறிவதாய்  எண்ணி
என் மனதை தூக்கி எறிந்து
காயப்படுத்தி விட்டாய் !
ஏனைய உலகம் முழுதும்
இரு பகலென மாறி மாறி
சுழன்று கொண்டிருக்க
என் உலகு மட்டும் - உந்தன்
நினைவுகளுடனும் உனக்காக  என்
இதயமெங்கும் வழிந்தோடும்
காதல் கனவுகளோடும் மட்டுமே !
கனவில் களிப்பூட்டிய காதல்
நிஜத்திலும் என் உலகை
வண்ண மயமாக்கி - மகிழ்ச்சியில்
எனை திக்குமுக்காட செய்யுமென
எண்ணி காத்துக் கிடக்க
எனை கொண்டாட்டத்தில் - களிப்பின்
உச்சத்தில் ஏற்றி வைத்த காதல்
என் உள்ளத்துதித்த ஆசைக் காதல்
கொண்டாடப் படாத காதலாய் - உள்ளத்தின்
அடியாழத்தில் அமைதியாய் உறங்குகிறது !
Related Posts Plugin for WordPress, Blogger...