Showing posts with label pullankulal-blog. Show all posts
Showing posts with label pullankulal-blog. Show all posts

Wednesday, June 6, 2012

கிள்ளையின் துயில்



உறக்கமது கண்ணைத்
தழுவ - கனவதனில்
இறைவனும் கைகோர்த்து
விளையாட - பட்டு
மஞ்சமதும் மலர்
மஞ்சமாக - தனை மறந்து
துயிலுகிறது
சின்னஞ்சிறு  கிள்ளை!!!

http://pullaankulal.blogspot.com/2012/05/10.html 

பூட்டு



தனக்குத்தானே வேலியிட்டு
அடைந்து கொண்டிருக்கும்
மனம் - பல நாட்கள்
இடமொன்று கதவடைத்து
போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....
கதவு திறந்தால்
வெளிச்சம் கிடைக்கும்....
மனம் திறந்தால்
தெளிவு பிறக்கும்...

http://pullaankulal.blogspot.com/2012/05/9.html 

Thursday, May 31, 2012

காணிக்கை




உள்ளம் உருகும்
இசை மீட்டிய
பியானோவின் இசைக்கு
இங்கு மலரும்
தன்னை காணிக்கையாக்கியதோ???

http://pullaankulal.blogspot.com/2012/05/8.html 

மையல்



உள்ளமதில் வழிந்தோடும்
எண்ண அலைகளுக்கு
வார்த்தைகளால் வடிவம்
கொடுத்து - இசை கொண்டு
மெருகேற்றி
காற்றில் கலந்து வரும் கானமென
வானொலிப் பெட்டியும் 
இசைத்திட - ஆசை
ஊஞ்சலதில் பருவமும்
அசைந்தாட - மையலில்
மயங்கிச் சிரிக்கிறாள்
இளமாது!!!

http://pullaankulal.blogspot.com/2012/05/7.html 

Sunday, November 20, 2011

விதையிலிருந்து......


விதையாய் பூமிதனில்
விழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
http://pullaankulal.blogspot.com/2011/11/5.html#comment-form

மழைத் தாய்க்கு ஓர் நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!


மழைக்கு கறுப்புக்
குடைதனை
கொடியாகக்  காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத்  தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!!
http://pullaankulal.blogspot.com/2011/11/6.html#comment-form


Thursday, November 10, 2011

காலடிச் சுவடு


 கடற்கரை மணலில்
பதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து  வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!


குழலோசை-2

கள்ளமில்லாச் சிரிப்பு


நீரும் இங்கு குதூகலிக்கிறதோ???
கொள்ளை கொள்ளும் உன் 
கள்ளமில்லாச்   சிரிப்பைக் கண்டு!!!

குழந்தையின் வார்த்தைகள்


உன் உயிருள் நான் உதித்தேன்.....            
உன்னுள் நான் வாழ்ந்தேன்.........
உன் அன்பின் ஸ்பரிசங்களில் 
பாதுகாப்பை உணர்கிறேன்.....
என்றும் உன் -
தூய உள்ளத்து அன்பை
உறுதுணையாய்க்  கொண்டு 
வலம் வருவேன் உலகினையே-
வெற்றித் திருமகனாய்!!!
குழலோசை-3
              

Monday, October 17, 2011

மெல்லிறகு


காற்றில்  மிதந்து  வந்து
கண் முன் நடனமாடி
உன் கவனம் கலைக்கிறேன்......
உள்ளம் துவண்டு விடாது
முயற்சிக்கத்  தூண்டுகிறேன்......
உன் கைதனில் தஞ்சமடைந்து
உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
முயற்சியின் அருமையை
உணர்த்துகிறேன்.........
மென்மையாய்  வருடிச்  சொன்னது ........
Related Posts Plugin for WordPress, Blogger...