Showing posts with label nadikavithai-blog. Show all posts
Showing posts with label nadikavithai-blog. Show all posts

Monday, January 28, 2013

நாடி கவிதை போட்டி 3



உன் அலைபாயும் கூந்தல்-
மேகக் கூட்டமென
நிலவும் நட்சத்திரங்களும்
தஞ்சம் புகுந்து விட்டனவோ ??
உன் விரல்களின் அரவணைப்பில்
அவை குளிர் காய்கின்றனவோ ??


கார்மேகமென உன் கூந்தலும்
காற்றின் இசைக்கேற்ப
அலைபாய - கரங்களிரண்டும்
மேகங்களை தாங்கும்
வான் போல் அணைத்து
நிற்க - விழியிரண்டும்
வெட்டி வைத்த
நிலவுத் துண்டங்களாய்
ஒளி பரப்ப - வான் தேவதை
பூமியில் வந்திறங்கி
அமர்ந்திருப்பது போன்றொரு
ஒயில் !!!

Friday, June 8, 2012

Facebook (முகநூல் )

அருகிருக்கும் உறவுகளின்
பாசம் மறந்து -
முகமறியாதோரின் நேசம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
மூடர்களின் உலகம் - முகநூல்!!!



நிஜமும் நிழலும்
பிரித்தறிய இயலாது
பின்னிப் பிணைந்து
விரவிக் கிடக்கும்
மாய வலையுலகம் - முகநூல்!!!

Friday, May 4, 2012

நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.



தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டதா
எனும் நிலை வந்ததோ??

Related Posts Plugin for WordPress, Blogger...