Monday, March 28, 2011

ஒரு மரத்தின் கோரிக்கை...


உயரமாய் வளர்ந்து
தென்றலின் இசைக்கேற்ப
தலையசைத்து ......
கிளைகளை கைகளென விரித்து
உங்களை நோக்கி
நீட்டிக் கொண்டிருக்கிறேன்....
உங்களிடம் உதவி வேண்டி அல்ல...
உங்களை என் அன்புக் கரங்களால்
அரவணைத்துக் கொள்ள!!
மரமென்ற போதும்
ஜடமில்லை நான்
என்னுள்ளும் உயிர் உண்டு...
உள்ளன்போடு அரவணைக்கிறேன்
உங்களை என் பிள்ளைகள் என...
நன்றி சிறிதளவேனும் இருக்கட்டும்
உங்கள் உள்ளத்தில்!!!
நான் இன்றி நீங்கள் இல்லை என்பது
பதியட்டும் என்றும் மனதில்...
எங்களை வாழ விடுங்கள்-
எங்களால் நீங்களும் வாழுங்கள்!!!
http://eluthu.com/kavithai/36948.html

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...