Sunday, January 15, 2012

பழுது படாத பாசம்

உலகின் எந்த
மூலையில் இருந்தாலும்
நம்மையே சுற்றிச் சுற்றி வரும்
ஓர் அன்பு வளையம் !!!
தான் பசித்திருந்தாலும்
பிள்ளையின் பசி தீர்க்க
ஒவ்வோர் நொடியும்
துடிக்கும் உயர்ந்த உள்ளம் !!!
நாம் கண் துயில - தான்
கண் விழித்து அருகிருந்து
தட்டிக் கொடுக்கும்
பாசக் கரங்கள்!!!
புத்தகம்/கணினியின் மடிதனில்
தலைவைத்து நாம் உறங்கிட
தன் மடிதனில் - நம் 
தலையதை சாய்த்து
நாம் உறங்கும் திருப்தியில்
கண் விழித்தே
தூக்கமதை மறந்திடும்
உன்னத ஆத்மாக்களாம்
தாய் தந்தையரது பாசம்
என்றுமே -
பழுது படாத பாசம் !!!
மலையளவு பாச மழையில்
நனைந்திட்ட நாம் -
துரும்பளவேனும்  அவர்கட்கு
கொடுத்தால் - உருகிடாதோ
அன்பு நெஞ்சங்கள் ???

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...