Sunday, January 12, 2020

அலைகளின் தாகம்



கரை தொட ஓடிவந்து விட்டு
காரணமின்றி  பின்வாங்கி செல்லும்
அலைகளென  - உள்ளமதில்
அலைமோதும் எண்ணங்களை
கொட்டிவிட எத்தனித்தாலும்
மெல்ல பின்வாங்கி அவை
மனத்தின் அடியாழத்தில்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகின்றனவே !

உறுத்தும் எண்ணங்களை
நினைவுகளை ஒதுக்கி தள்ளிவிட்டால்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் தாகம்
தீர்ந்துவிடுமெனில் - அவற்றை
தூக்கிச் சுமக்காது
கீழே இறக்கிவிட்டு தான் பார்ப்போமே !

4 comments :

  1. நல்லதொரு கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    உங்கள் தகவலுக்காக...

    முகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு

    http://venkatnagaraj.blogspot.com/2019/12/blog-post_2.html

    உங்கள் கவிதைகளும் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...