Wednesday, April 15, 2020

மகள்

உள்ளத்தாலும் உணர்வினாலும்  
உன்னில் என்னைக் கண்டே     
என்னில் உன்னை நிறைத்தே                       
நாளெலாம் கடக்கிறேன் !
காலத்திற்கும் சிநேகிதியாய்
கதைகள் பேசி இலயித்திருக்க
ஏற்றம் தாழ்வு எதுவரினும்
தோள் கொடுக்கும் தோழியாய்
கண்மணி உனக்கு நானிருப்பேன்
எந்தன் மடியில் முகிழ்த்த நல்முத்தே !

இக்கவிதை அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது.

வாசிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும், youtube வீடியோவாக உள்ளது.

https://youtu.be/2Shsuo1NxyI

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்


திராவிட வாசகர் வட்டம் நடத்தும், பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 க்கு நான் எழுதிய 5 சிறுகதைகள்.அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited வைத்திருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08669MCPX/ - கூட்டு வாழ்வு
https://www.amazon.in/dp/B086CY2MQ9/ - கும்பி கற்ற பாடம்

இவ்விரு நூல்களும் இப்போது, free promotion ல் உள்ளது. நண்பர்கள் வாசித்து, review எழுதினால், போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருக்கும். போட்டியின்  அடுத்த நிலைக்கு செல்ல 10 review க்கள் தேவைப்படுகிறது. இயன்ற நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.amazon.in/dp/B08721CK7J/ - பென்குவினின் கதை
https://www.amazon.in/dp/B085DNRVZX/ - பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவது எப்படி?https://www.amazon.in/dp/B085VK46SX/
பூச்சிகளும் பூச்சிகளை உண்ணும் செடிகளும்

அனைத்து நூல்களையும் Kindle unlimited வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களும், amazon reviews ம், புத்தகம் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற உதவும்.

உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.









Sunday, February 16, 2020

உண்மை உயிர்த்தெழும் நாள்.



மெளனம் சொன்ன சாட்சியங்கள்
அதனதன் வசதிக்கேற்ப உருப்பெற்று
தலையும் தெரியாது வாலும் புரியாது
அறியாமை ஆற்றாமை போதயேறி ஆட
சிலுவையில் ஆணி கொண்டு
அறையப்பட்ட நிலையில்
உண்மையும் அன்பும் தான்
உயிர்த்தெழும் நன்னாளும் எந்நாளோ !

Sunday, January 12, 2020

அலைகளின் தாகம்



கரை தொட ஓடிவந்து விட்டு
காரணமின்றி  பின்வாங்கி செல்லும்
அலைகளென  - உள்ளமதில்
அலைமோதும் எண்ணங்களை
கொட்டிவிட எத்தனித்தாலும்
மெல்ல பின்வாங்கி அவை
மனத்தின் அடியாழத்தில்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகின்றனவே !

உறுத்தும் எண்ணங்களை
நினைவுகளை ஒதுக்கி தள்ளிவிட்டால்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் தாகம்
தீர்ந்துவிடுமெனில் - அவற்றை
தூக்கிச் சுமக்காது
கீழே இறக்கிவிட்டு தான் பார்ப்போமே !

Sunday, October 13, 2019

சாம்பலாய் முடியும் உடல்



உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் ! 

Wednesday, October 2, 2019

அன்னையின் அரவணைப்பில்....



அன்னையின் தோளில் சாய்ந்து
உலகத்தின் அழகில் இலயித்திருக்க
முன்னின்று பின்னோக்கியும்
பின்னின்று முன்னோக்கியும்
ஓடும் காட்சிகள்
நிகழ்வுகளின் சாட்சிகளாய் !
காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
அன்னையின் தோள்
தலையணையாயும் – அவர்தம்
கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
சுகமான துயிலும் கண்களை
வருடியபடி தழுவிக் கொள்ள
அன்னையின் முத்தங்கள்
தாலாட்டு பாட – உறங்கிப் போன
கிள்ளையின் துயில் கலையாது
அலுங்காது நடக்கும் கலை
அன்னைகட்கெலாம் – தானாக
கைவந்து சேரும் உத்தியன்றோ !
அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
பின்னிருக்கும் உதடுகளில்
புன்னகையும் – உள்ளத்தில்
ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
வித்தை கைவரப் பெற்றவர்கள்
கிள்ளைகள்!

Friday, September 6, 2019

நட்பு என்பது யாதெனில்...


பிரதிலிபி நடத்தும் இருவேறு போட்டிகளில் எனது படைப்புகள். 

பயணங்கள் முடிவதில்லை என்ற போட்டிக்கான எனது படைப்பு


மாமழை என்ற மழை குறித்து கவிதை எழுதும் போட்டிக்கான படைப்பு


நட்புக்கள் வாசித்து உங்களது கருத்துகளை பகிருங்கள். நன்றி.
 



Tuesday, September 3, 2019

சிரிப்பு !



பிறரை மகிழ்விக்க
கண்களில் அரும்பி
உதடுகளில் மலரும்
எழில் நிறை பூ - சிரிப்பூ !

அணி ஆபரணம் தராத
எழில் தனை - கள்ளமிலா
சிரிப்பு அனாயசமாக
வாரித் தந்துவிடும்!

பிறர் உள்ளக் குடம் உடைத்து
அவர்தம் கண்ணீரை தண்ணீராய்
நம் எண்ணச் செடிகளுக்கு
பாய்ச்சாதவரை அழகு - இந்த சிரிப்பு !

கொள்ளையிட்டு கொண்டுவிட
வாய்ப்பே இல்லாதது !
கொடுத்தால் - தானே தேடி வந்து
நம்மை தஞ்சமடையும் சிரிப்பு !
 
 
இவ்வார தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான கவிதை.
Related Posts Plugin for WordPress, Blogger...