Wednesday, August 17, 2011

மழை

தன்மையை தன்னகத்தே கொண்ட 
 மழை அன்னை -கார்முகில் தேரில் 
பூமி நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் -
மண்ணின் மணம் பரப்ப!!!
அன்னையின் வரவை அறிவிக்க 
 மத்தளமென  இடி முழங்க 
வண்ண விளக்குகளென 
மின்னல் ஒளிபாய்ச்ச 
துளிகளாய் வருகிறாள் 
 மழை அன்னை.......
அவளின் வரவிற்காக 
காத்திருந்தது போன்று 
எங்கிருந்தோ ஓடி வந்து விட்டன-
தவளைக் கூட்டங்கள்.....
இன்னிசைக் கச்சேரியை ஆரம்பிக்க!!!
மழையைக் கண்டதும் அங்கங்கே 
காளான் குடைகள் விரிந்து நிற்கின்றன...
மரங்களும் சிலிர்ப்புற்று 
அசைந்தாடி நிற்கின்றன.......
வாருங்களேன் .....நாமும்
 மழையுடன் மகிழ்ந்திருப்போம் !!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...