Wednesday, October 19, 2011

பணம்

 










வெற்றுக் காகிதமெனில்
துச்சமென எண்ணக் கூடும்.......
அதற்கே மதிப்பு கூடி
பணம் என ஆகையில்
கண்ணில் ஒற்றிக் கொள்ளத்  தோன்றும்!

பணம் வந்த  நொடியில் 
உலகையே  நம் சுற்றமாக்கும்....
ஆனால்.....
செல்லும் நொடியிலோ
நம்மை தனிமரமாக்கும்.......

உள்ளங்களின் நிறத்தை 
உறவின் அடையாளத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டும்
மாய விளக்கு.....பணம்!!!





No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...