Saturday, March 17, 2012

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்



பனிக் காலம் கொடுத்தது
கதிரவனுக்கு  நீண்ட ஓய்வு....
ஓய்வெடுத்து களைத்துப் போனவன்
முகம் காட்டுகிறான் - மேகத்
திரையினின்று!!!
அவனுக்கு உற்சாகமாய்
மலர்ந்த முகங்களுடன்
வரவேற்பளிக்கின்றன -
மரங்கள் !!!
புன்னகையை சூடிக் கொண்டு......
பூமித் தாயும் தன்மையை சுமந்து
மலர்களால் அர்ச்சிக்கப் பட்டு
பூரித்து நிற்கிறாள் !!!
மீண்டும் துளிர்த்த மரங்கள்
அளித்தன - மண்ணிற்கு
புன்னகையையும் - மனதிற்கு
மகிழ்ச்சியையும்!!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=80 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...