Monday, September 23, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!! - தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி


ஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்
உள்ளத்து அறியாமை இருளகற்றி
அன்பெனும்  அருள் விளக்கினை
இதயங்களில் ஏற்றிடுவோம் !!!

உள்ளமதில் தோன்றும்
வெறுப்பு பகை மறந்து
கலகப்பாய்  சரவெடியென
பேசிச் சிரித்து மகிழ்ந்திடுவோம் !!!

பண்டிகை பதார்த்தத்துடன்
பாசத்தினையும் பகிர்ந்திடுவோம்
பலமான அன்புறவு தனை
பாங்குடனே வளர்த்திடுவோம் !!!

சிதறும் மத்தாப்புகளென
சிரிப்பினை  உதிர்த்திடுவோம்
சிந்தனைகளை உயர்வாய் கொண்டு
சித்தமாக்கிடுவோம் காரியங்களை !!!

கவலைகளை புஸ்வானமாய்
தெரித்தோடச்  செய்து விட்டு
அழகான புன்னகையால்
தீபங்கள் ஏற்றுவோம் !!!

நெஞ்சில் இரக்கம்  மிக கொண்டு
உதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்
ஆதரவுக்கரம் நீட்டுவோம் ! - அவர்தம் மகிழ்ச்சி
புன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள
 நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!!


நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2/

35 comments :

  1. கருத்துக்கள் அருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  2. வெற்றிபெறவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. வெற்றிபெறவாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை, வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி..

      Delete
  5. உள்ளத்து உவகையுடன் நிறைந்த மனமாய்ச் சிரிக்கும் நாளே தீபாவளி!

    நல்ல கருத்துச் செறிவு! அருமை!
    வெற்றிபெற நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வணக்கம்
    உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்தை தங்களுக்கு அறியத் தருகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல சகோதரரே.....

      Delete
  8. அன்பு, பாசம் இவை கலந்த தீபாவளியை கவிதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள், தமிழ் முகில். பாராட்டுக்கள்.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  9. நெஞ்சில் இரக்கம் மிக கொண்டு
    உதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்
    ஆதரவுக்கரம் நீட்டுவோம் !
    ஈகையை உணர்த்தும் வரிகள் அருமையான பல நல்ல செய்திகளை சொல்லிச் செல்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் .தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  11. அழகான கருத்துக்கள் அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா.

      Delete
  12. நல்ல கருத்துக்கள், அருமை.

    வெற்றி பெறவாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
      தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள்.

      Delete
  13. ''..அழகான புன்னகையால்
    தீபங்கள் ஏற்றுவோம் !!!...''
    Eniya vaalththu..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே.

      Delete
  14. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      நடுவராய் இருந்து என் கவிதையையும் பரிசுக்குரிய ஒன்றாய் தேர்வு செய்து எனக்கு மென்மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

      Delete
  15. ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில்
    வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  16. தீபாவளிக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி.தங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete

  17. வணக்கம்!

    மத்தாப்புச் சொற்களில் வார்த்த கவியழகு
    முத்தாப்பு மேன்மை முகிழ்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  18. மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  19. வணக்கம்
    தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
    dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே. சான்றிதழ் கிடைக்கப் பெற்றதும் தங்களுக்கு அறியத் தருகிறேன்.

      நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...