Tuesday, December 24, 2013

தேவனே போற்றி ! போற்றி !!







அன்பின் வடிவமாய்
அகிலத்தை நனைக்க வந்த
கருணை மழையே !
மன்னிப்பின் மகத்துவத்தை
மண்ணுலகுக்கு உணர்த்திய
மாசிலா மன்னவனே !
எம் பாவங்கள் தம்மை
சிலுவையாய் தோளில்
சுமக்கும் பிதாவே !
எமக்காய் முட்கிரீடம்
தாங்கி நிற்கும்
எம் இறைவனே  !
அமைதியும் ஆனந்தமும்
அகிலமதை  நிறைத்திட
அன்பினை கற்பித்தவரே !
உங்கள் மலரடி போற்றி !
தன்னலமிலா உளமது போற்றி !
அன்பு இதயமது போற்றி !
தேவனே ! போற்றி ! போற்றி !!


9 comments :

  1. இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் தோழி!

    கருணை யேசுவை வேண்டி
    அருமைப் பாடலால் போற்றினீர்!

    மிக அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் தோழி. தங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் தோழி.

      Delete
  2. இனிய கிறிஸ்துமஸ் தின நல வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் தோழி. தங்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் தோழி.

      Delete

  3. வணக்கம்!

    தேவனைப் போற்றித் திளைக்கும் கவிதையின்
    பாவினை உண்டேன் பசித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. கிறிஸ்மஸ் சிறப்புக் கவிதை
    வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான கவிதை.

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...