Thursday, August 20, 2015

பூட்டிய வாசல்

பூட்டிக் கிடக்கும்
வாசல் கதவருகில்
கைகட்டி சமர்த்தாய்
காத்திருக்கிறாயே -
யாருக்காக ?
அன்னையும் தந்தையும்
வேலைக்கு சென்றிருக்க
விளையாடி ஓய்ந்ததும்
வீட்டிற்கு ஓடி வந்தாயோ ?
பூட்டிக் கிடக்கும்
வீட்டு வாசலிலிருந்தபடியே
உன் வயது பிள்ளைகளின்
விளையாட்டை கண்டு
இரசிக்கிறாயோ ?
ஓடியாடி விளையாடி
உள்ளம் மற்றும் உடலினை
உறுதியாக வைத்துக் கொள் !
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
எவர்க்கும் அஞ்சாத தன்மையும்
குறையா ஞானமும்
உன்னை பாரினில் உயர்த்திடும் !
கள்ளம் கபடமறியா
கிள்ளை உள்ளம் தனையே
காலமெலாம் பெரும் செல்வமென
காத்துக் கொண்டால்
நல்வாழ்வும் தானிங்கு வசப்படும் !

6 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...