Wednesday, September 28, 2016

சித்திரை மகளே வாராய் !

சித்திரை மகளே வாராய் !
சிந்தை மகிழ்விக்க வாராய் !
சந்தமாய் உலக வாழ்வு தனை
சந்தித்து மகிழ்ந்திட வாராய் !
சிந்தும் மழையும் தான்
இதயம் குளிர்விக்க வேண்டுமே !
அடிக்கும்  வெயிலும் தான்
அளவாய் சுட்டால் போதுமே !
சுருங்கும் மனங்களும் தான்
சற்றே விசாலமாகட்டுமே !
தன்னலம் மறந்த நிலையதில்
பொதுநலம் உலகை வழிநடத்துமே !
அன்பே வாழ்வதன் ஆதாரமென்பதை
உணரும் நாளும் வரட்டுமே - பணமே
பிரதானமெனும் மாய எண்ணம்
மனங்களின்று விலகட்டுமே !
இன்னல் எல்லாம் பனியென
கரைந்து ஓடட்டுமே ! - இன்பம்
புது வெள்ளமென பொங்கி வரட்டுமே !
புத்தாண்டினை - நல்ல எண்ணங்களோடு
நல்வாழ்வினையும் சேர்த்தே வரவேற்போமே !

2 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...