Wednesday, August 7, 2019

வர்ணஜாலம்



வர்ணஜாலங்களாய்  கண்முன் விரியும்
மனதுள் பொக்கிஷமென புதையுண்ட
இனிமையான கணங்கள் !
கண்மூடி - மனம் திறக்க
மனமெங்கும் மணம் கமழும்
நிகழ்வுகளின் வாசங்கள் !
கடந்த கணங்களும் வாசங்களும்
விட்டுச் சென்ற நினைவுகள்
நிகழ் காலமதை நடத்திச் செல்லும்
கைக்காட்டி மரங்களாய் !
மனதுள் தெறித்த வர்ணஜாலங்களை
நிஜத்திலும் தீட்டுவோம் !
வண்ணமயமான உலகில்
மகிழ்ச்சியை தூவிச் செல்வோம் !
துயர் துன்பக் கறையை
துடைத்துச் செல்வோம் !

3 comments :

  1. நல்ல கவிதை. தினமணியில் வெளியிடு - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...