Sunday, December 16, 2012

தொலைதூரக் காதல்!



உன் நினைவுகளில் நானும்
என் நினைவுகளில் நீயும்
நீங்காது நிலைத்திருக்க
தூரமும் தொலைவும் தான்
காதலை பிரித்திடுமா என்ன ???

அருகாமையும் அரவணைப்பும்
உணர்த்தாத காதலை
பிரிவும் தொலைவும்
தெள்ளத் தெளிவாய்
படம் பிடித்துக் காட்டிடாதோ ???

அனுதினமும் வளர்ந்திடுமே 
அளவிலா   காதலும் ....
பிரிவதுவும் ஏற்படுத்துமே
ஆழமான வலுவான
அன்பின்  அஸ்திவாரம் !!!

உந்தன் அன்பின் அருமையை
எனக்கும் ......எந்தன் -
காதலின் வலிமையை
உனக்கும் ......உணர்த்திடாதோ ???
இந்த தொலைதூரக் காதல் !!!

http://www.vallamai.com/literature/poems/29825/ 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...