Friday, June 7, 2019

கோடை விடுமுறை

பரீட்சைகள் முடிந்தன
பயமெல்லாம் தீர்ந்தன !
ஒய்வெடுக்கும் காலமிது -

கிள்ளைகளின் மூளைகளுக்கே !
துறுதுறுவென துள்ளியோட நேரமிது
சின்னஞ்சிறு கால்களுக்கே !

தன் பணியை சூரியன்
செவ்வனே செய்ய -
குளிர்விக்க பல்வகை கனிகளும்
இயற்கையின் கொடையாய் !
தாகம் தீர்க்க தண்ணீரை விட
சிறந்ததொன்று வேறெதுவுமில்லை !
குளிர்பானங்களை ஒதுக்கி வைப்போம் -
நமக்கேன் வீண் தொல்லை ?

சுட்டெரிக்கும் சூரியனை
திட்டித் தீர்ப்பதை விடுத்து
முதற் கடமையாய்
மரம் வைத்து காத்திடுவோம் -
அடுத்த கோடையிலேனும்
அதன் மடியில் இளைப்பாறிடுவோம் !

இயற்கையை பகைத்துக் கொள்வதை விட்டு
இயற்கையோடு கைகோர்த்து
காலநிலை சீராக்குவோம் !
இயற்கையோடு இயைந்த வாழ்வால்
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இம்மண்ணில் நம் வாழ்வினையே !

6 comments :

  1. நன்று. பாராட்டுகள்....

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      Delete
  2. இயற்கையோடு இயைந்த வாழ்வால்
    இன்பமாய் வாழ்ந்திடுவோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...