Friday, December 16, 2011

போதும்...போதும்...போதும்

தன் நிலை மறந்து
பிறரை பொல்லாங்கு
சொல்லுவோரின்
வார்த்தைகள்.......
முகத்திற்கு முன்
தேனொழுகும் வார்த்தைகள்
முதுகுக்குப் பின்
கேட்கக் கூசும் சொற்கள் ........
தனக்குத் தான்
பேசும் அதிகாரம்
என்ற ஆணவத்தில்
வளைந்தாடும் நாக்கின்
விஷக் கணைகள்......
இவையனைத்தையும் கேட்டு
காதும் தான் அலறிற்று -
போதும்.....போதும்.....போதும்........
வார்த்தைகளைக் கொட்டிவிடுவது
என்னவோ - சுலபம் தான் !!!
ஆனால் - அதனை
அள்ளுவதென்பது ????
http://www.vaarppu.com/padam_varikal.php?id=3



No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...