Tuesday, April 15, 2014

பிள்ளைக் கனியமுதே - 4



நீ  செய்யும் சிறுசிறு
உதவிகளில் எல்லாம்
சொக்கிப் போய் தான்
நிற்கிறேன் !

நற்காரியத்திற்கு கைதட்டலுடன்
ஊக்கம்   சேர்க்கும் உன்
அழகு  குணம் தனை
மெச்சுகிறேன் !

உறங்கும் போது நீ
உதிர்க்கும் சிறு முறுவலை
கண் இமையாது தான்
காண விழைகிறேன் !

என் கண்ணே பட்டு விட்டால்
என்ன செய்வேனென்றே
சடாரென பார்வையை
திருப்பிக் கொள்கிறேன் !

என் மனநிலை அறிய
முகம் நோக்கும் உன் 
குறுகுறு விழி கண்டு
எனை மறந்து சிரிக்கிறேன் !

உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கிறேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே எனை தேடுகிறேன் !

என் கண்ணான கனியமுதே !





பிள்ளைக்  கனியமுதே ! - 1  
 பிள்ளைக்  கனியமுதே ! - 2 
பிள்ளைக் கனியமுதே ! - 3

2 comments :

  1. தொடர்ந்து பதிவிடும் பிள்ளைக் கனியமுதின் எல்லா கவிதையும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...