Friday, September 30, 2011

மண்ணின் மைந்தர்கள்

சாலை ஓரங்களில் 
இத்தனை காலமாய் 
யாருக்காக இவர்கள் 
காத்து நிற்கிறார்கள்??
ஒற்றைக் காலில் 
நின்று கொண்டு
எவரை நோக்கி 
தவம் செய்கிறார்கள்??
இவர்களது தலைகளில் 
பறவைகள் கூடுகட்டி
வாழ்ந்த போதும்
இவர்களது 
ஆழ்மனத் தியானம் 
கலையவில்லையே ? யாருக்காக இவர்கள்
வாழ்கிறார்கள்?
                                                          மானுடா...... சற்று சிந்தியேன்....
தான் வாழும் போது -
உன்னை வாழ வைத்து 
தான் வீழ்ந்த (வீழ்த்தப்பட்ட ) பின்னும் 
உனக்கு வாழ்வளிக்கும்
 மண்ணின் மைந்தர்களாம் - மரங்களை 
காத்திட உறுதி கொள்ளலாமே!   
 http://www.vaarppu.com/view/2551/
 http://eluthu.com/kavithai/41449.html
   

2 comments :

  1. நிதர்ப்பமான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...