Wednesday, November 2, 2011

இளமை மாறாக் காதல்


தனிமையிலே  நாமிருக்க 
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க‌ -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி  நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்-
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
http://www.eegarai.net/t72755p165-topic 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...