Wednesday, November 30, 2011

கடற்கரையில் ஒரு கோடை மாலை


யாரப்பா அங்கே.....
சூரிய தேவனவன்
ஓய்வெடுக்கச் செல்கிறான்....
வழியனுப்ப வாருங்களேன்...
நாள் முழுதும் அயராது
தன் ஒளிக் கதிர்களால்
சுட்டெரிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடித்து
அயர்ந்து போய் -
தன் சூட்டையெல்லாம்
ஆழியினுள் அழுத்தி
ஆழி நீரையும்
அகன்ற வானமதையும்
செம்மையாக்கி விட்டு
நித்திரைக்குள் மூழ்குகிறான்
சூரிய தேவனவன்.........
வாருங்கள் - வரவேற்கத்
தயாராவோம்.....தன்மையை
தன்னகத்தே கொண்ட
சந்திர  தேவனை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=73

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...