உண்டிக்கு உணவும்
உடலுக்கு உடையும்
உருவாக்கி உலகுக்களிப்பது
உழவன்றி வேறெதுவோ ???
உயிருக்கு ஆதாரமாம்
உழவும் தானின்றி
பிறதுறை முன்னேற்றங்கள்
எங்ஙனம் சாத்தியமாகுமோ ???
உலகை கைக்குள் அடக்கியதாகவும்
தன்னிடம் இல்லாததெதுவுமில்லை
என்றரைகூவலிடும் இணையமும் கணினியும்
ஒரு கவளம் உணவளித்திடுமோ ???
உழவரும் தான் சேற்றில்
கால் வைக்க மறுத்தால்
நாம் சோற்றில்
கை வைக்கவும் இயலுமோ ???
உழவு பெருகி உற்பத்தி உயர
தேச வளம் உயரும் !!!
வளம் பெருகிடின்
வாய்ப்புகள் பெருகும் !!!
உணர்வோம் உழவின்
பெருமையை ! - நினைவில்
கொள்வோம் என்றென்றும் -
உழவின்றி உலகில்லை !!!
உடலுக்கு உடையும்
உருவாக்கி உலகுக்களிப்பது
உழவன்றி வேறெதுவோ ???
உயிருக்கு ஆதாரமாம்
உழவும் தானின்றி
பிறதுறை முன்னேற்றங்கள்
எங்ஙனம் சாத்தியமாகுமோ ???
உலகை கைக்குள் அடக்கியதாகவும்
தன்னிடம் இல்லாததெதுவுமில்லை
என்றரைகூவலிடும் இணையமும் கணினியும்
ஒரு கவளம் உணவளித்திடுமோ ???
உழவரும் தான் சேற்றில்
கால் வைக்க மறுத்தால்
நாம் சோற்றில்
கை வைக்கவும் இயலுமோ ???
உழவு பெருகி உற்பத்தி உயர
தேச வளம் உயரும் !!!
வளம் பெருகிடின்
வாய்ப்புகள் பெருகும் !!!
உணர்வோம் உழவின்
பெருமையை ! - நினைவில்
கொள்வோம் என்றென்றும் -
உழவின்றி உலகில்லை !!!
http://eluthu.com/kavithai/100659.html

No comments :
Post a Comment