Monday, April 1, 2013

தேவை ஒரு மாற்றம்!

 

 அறிவு புகட்ட வேண்டிய

அறிவாலையங்கள் எல்லாம்

ஆக்கம் சேர்க்கத் துவங்க

ஆகித்தான்  விட்டது

இன்று கல்வியும் - பணம்

ஈட்டுமோர் வியாபாரமாய் !!!

ஒன்று கூடி இருந்து

ஓடியாடி விளையாடி

மகிழ வேண்டிய பிஞ்சுகள்

ஓரிடமே கதியென்று

கட்டிப் போட்டுத் தான் விட்டது

கணிப்பொறி விளையாட்டுகளும் !!!

முதுகிலேற்றும் புத்தகச் சுமையுடன்

மூளையிலேற்ற வேண்டிய

பாடச் சுமைகளும் அதிகமாக

சோர்ந்து தான் விட்டது அவர்தம்

உடலும் உள்ளமும் !!!

கல்வி முறையில் தேவை

உடனடி மாற்றம் ! இல்லையேல்

நாளைய பாரதத்திற்கு காத்திருக்கிறது

மிகப் பெரிய ஏமாற்றம் !!!
http://www.muthukamalam.com/verse/p1168.html 


No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...