Friday, December 23, 2011

ஆழிப் பேரலை நினைவாக

பொங்கிவரும் அலையது
கரைவந்ததும் சிறு
கிள்ளை என கால் தழுவி -
நின்றால் உள்ளமதில்
பொங்கும் மகிழ்வு -
ஏனோ இன்றில்லை...
சோகமும் பயமுமே
மனதை பிசைகின்றன....
அந்த நாள் மட்டும்
ஏன் உனக்கு அப்படியோர்
அகோரப் பசியோ??
உன் கரையதில்
ஆடி விளையாடி
களித்திட்டோர் எத்தனையோ...
இன்று உன்னால்
கண்ணீர் சிந்துவோரும்
எத்தனையோ....
நீயும் தான் ஆக்கிவிட்டாய்
திசம்பர் 26ஐ .......எண்ணினாலே
குலைநடுங்கும் நாளாய்-
அனைவரது மனதிலும்!!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=1 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...