Wednesday, December 14, 2011

2011 விட்டுச்சென்ற...


2012 என்றில்லை...
எல்லா ஆண்டுகளும்
நம்முள் ஏதோ ஓர்
புதிய உந்து சக்தியை
ஏற்படுத்தத்தான் செய்கின்றன !!!
நாம் கடந்து வந்த
ஆண்டுகளில் - வசந்தங்களும்
புயலும் மாறி மாறி
வந்து கொண்டே தான் இருந்தன...
இனியும் அவ்வாறே இருக்கும்..
ஏனெனில்....இன்பமும் துன்பமும்
கலந்ததன்றோ வாழ்க்கை ????
2011 நம்முள் விட்டுச் சென்ற
இன்பங்களை - என்றும் அழியா
நினைவுகளில் கொள்வோம் !!!
துன்பங்களை தோல்விகளை
பாடங்களாய் அனுபவங்களாய்
மனதில் கொள்வோம் !!!
வரவேற்போம் எதிர் வரும்
புத்தாண்டை புன்னகையோடு !!!
புதிய நம்பிக்கையோடு !!!
நம்புவோம் - புத்தாண்டு
கொண்டு வரும்
அனைவரது வாழ்விலும்
வசந்தங்கள் பலவென்று  !!!
வேண்டுவோம் - புத்தாண்டு
அனைவரது உள்ளத்து நீண்டநாள்
கனவுகள் ஆசைகளை
நிறைவேற்ற வேண்டுமென்று !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=78 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...