Friday, December 23, 2011

கவித்துவமான புகைப்படங்கள் - 2

கரையில் நிற்கும்
மரத்தின் பிம்பம்
நதியின் முகத்தில்....
என் மனதிருக்கும்
துன்ப அலைகள்
எவர் அறிவரோ??

வெண்பனி தோழனை
வரவேற்று கட்டித் தழுவ
மரமும் தயாராய்
நிற்கிறதோ??

 மழையின் தண்மையில்
துள்ளியாடி களைப்பு
மேலிட்டதோ??
காளான் குடைக்கடியில்
ஓய்வாக ஒதுங்கியுள்ளதே-
தத்தித் தாவும் தவளை.

பஞ்சுக் குவியலென
பிஞ்சுக் குழந்தையின்
பாதம் - தந்தையின்
கைதனில் புத்தம்
புதியதோர் உலகம்!!
விழி மீன்களுக்கு
இங்கு தூண்டிலிட்டவரும்
எவரோ?? மீன்களின்
அழகதில் மயங்கி
தூண்டிலே இங்கு
வளைந்து நிற்கின்றனவே-
புருவங்களாக!!!

வெற்றி வானும்
தொட்டு விடும்
தூரம் தான்.....
வாழ்க்கைப் பாதையில்
முயற்சிப் பாதம் வைத்து
நடந்தால்!!

கண்ணாடிக் குடுவையும்
சருகில் தன் அழகிய
முகம் பார்த்து மகிழ்கிறது-
ஆதவனின் ஒளியில்!!!
மதுக் கிண்ணமும்
மதுவின் மயக்கத்தால்
மதி மயங்கி நிற்கிறதோ??
உள்ளத்து சோகங்கள்
ஆர்ப்பரிப்புகளுக்கு ஓர்
வடிகால் - அமைதியான
இயற்கையதன் மடிதனில்!!!
http://www.eegarai.net/t76873p15-topic#700186

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...