Friday, October 2, 2015

பரிதவிக்கும் பண்பாடு !



பண்பாடு ! பண்பாடு !
காலச் சக்கரத்தின் சுழற்சியில்
காணாமல் போனவற்றின் பட்டியலில்
முதலில் நிற்கிறது பண்பாடு !
சிற்றுயிருக்கும் உணவளித்த
அரிசி மாக்கோலமும்
கல் மாக்கோலமாகி
காலத்தின் கோலமின்று
விலைக்கு வாங்கும்
ஒட்டுப் படங்களுள்
தஞ்சமடைந்தன  - கோட்டுக்
கோலங்களும் நெளி கோலங்களும் !
உடற்பயிற்சியோடு மூளைக்கும்
பயிற்சி கொடுத்த கோலங்கள்
இன்றோ - ஒரு சிலருக்கு மட்டுமே
கைவந்த கலையாய் !
ஒரு காலத்தில்
வாசல் நிறைத்த கோலங்கள்
இன்று வீடுகளும் மனங்களும்
தீப்பெட்டிகளாய் சுருங்கிட
கோலம் போட வாசலுமில்லை !
பண்பாடு பேசிய வீடுகளெலாம்
கருக்கலுக்கு முன் காலியாகி
பின்னிருளில் வந்தடையும்
விடுதிகளாய் உருமாறிப் போக
பண்பாடும் இங்கே பரிதவிக்கிறது !
கைகொடுத்து மீட்டெடுப்பார் யாரோ ?

 குறிப்பு:

ஒட்டுப் படங்கள் -  Stickers

படத்திற்கு நன்றி, விக்கிபீடியா


உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

3 comments :

  1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. அருமையான கவிதை சகோதரி...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...