Thursday, February 13, 2014

இளமை மாறாத காதல் (காதலர் தின கவிதை)







அந்தப்  பச்சரிசிப் 
பல்  சிரிப்பும்
குழி விழுந்த
சின்னக்  கண்ணும்
என் கண்ணை விட்டு
அகலாது - என்
கண்ணான கண்ணவளே !

நெருப்பது சுட்டெரிச்சாலும்
என்னைய  வெட்டி  எறிஞ்சாலும் 
நெஞ்சுல பூவா நிறைஞ்சிருக்க
உன்  நெனைப்பும் தான்
அது என்னென்னைக்கும் 
என்னை  விட்டுப் போகாது - என்
பொன்னான சின்னவளே !

கஞ்சிக் கலையத்தை தான்
நீ சுமந்து வாரையில
மனசுந் தான் துள்ளிக் குதிக்கும் !
பூத்து நிக்கற வேர்வைப் பூவுந்தான்
உன் முந்தானை பட்டதும்
வெக்கப்பட்டு  ஓடிப் போகும் - என்
செல்லம்மா பொண்ணவளே!

பழைய கஞ்சியும்
நேத்து வச்ச மீன் குழம்பும் தான்
அமுதமாகிப் போகுமே
உன் பட்டுக் கை பட்டாலே !
உழைச்சு ஓஞ்ச உடம்பும் தான்
உற்சாகமாகுமே - உன் அன்பாலே
என் கட்டித் தங்கமானவளே !

காலமெலாம் உனக்கு நானும்
எனக்கு நீயுந்தான் -
காலமது மாறினாலும்
கோலமது மாறினாலும்
என்றும் இளமை மாறாது
நாம கொண்ட அன்பு தான்
என் வாழ்வானவளே !


Tuesday, February 4, 2014

சுமப்பதெல்லாம் சுமையல்ல !!!



பட்டுப் பாதம் அது
சுடும் நெருப்புல தான்
பொத்துப் போயிடுமோ
இல்ல -
கொத்து  நெருஞ்சியும் தான்
பஞ்சு பாதத்தையே
பதம் பாத்துருமோ
இல்ல -
நடந்து நடந்து உன்
குட்டிக் காலுந்தான்
நோவெடுத்துப்  போகுமோ
இதையெல்லாம் நினைச்சாலே
மனசு பதைக்குது - என்
தங்கச்சி தங்கமே !
நானே உன்ன சுமக்கறேன்
என் முதுகுல உப்பு மூட்டையா !
சுமக்கிறதெல்லாம் சுமை
ஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு
அண்ணன் உன்னை
விரசா  கூட்டிப் போறேன்
என் குட்டித் தங்கமே !!!


Related Posts Plugin for WordPress, Blogger...