Tuesday, April 5, 2016

நம்பிக்"கை"


உள்ளம் தனில் துணிவுண்டு !
உயர்வென மதிக்கும் உழைப்புண்டு !
கையிரண்டும் இல்லாது போனாலும்
நம்பிக்'கை' அது மனத்தில் அதிகமுண்டு !
கண்ணில் காணும் காட்சி யாவும்
மனத்திரையில் பதியும் ஓவியமாய் !
கைவிரல் பற்றும் தூரிகையை
வாயில்  பற்றியே
படைத்திடுகிறார் காவியமாய் !
குறையிலும் நிறை கண்ட தன்மை
அது மனோதிடம் கொடுத்த திண்மை !
சோம்பி இருத்தலே சுகமென்றிருக்கும் நாம்
இவரைக் கண்டு கற்றாலே
நலமாய் அமையும் நம்
ஒவ்வோர் செயலுமே தான் !

நண்பர்களின் உதவியை நாடி .....

ப்ரதிலிபி நடத்தும் மகளிர் தின சிறப்பு போட்டி. யாதுமாகி நின்றாள்  என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது படைப்புகள் . போட்டிக்கு  கவிதை, கட்டுரை, இரண்டு படைப்புகள் , கீழுள்ள சுட்டிகளில்  எனது கவிதை மற்றும் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து,  படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புகளுக்கான இணைப்பு

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram


3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

Related Posts Plugin for WordPress, Blogger...