Monday, February 22, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

இயற்கையின் கழுத்தை நெரித்து
ஆர்ப்பரித்த ஆறு ஏரியெலாம் பலிகொடுத்து
எக்காளமிட்டு ஏறி ஏறி நிற்கிறோம்
அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஒய்யாரமாய் !
தன் பலம் காட்ட கட்டுடைத்து - இயற்கை
கொட்டித் தீர்த்தது பெருமழையாய் !
நேயம் மரணித்து விட்டதோ - அல்லது
மயக்கமடைந்து எங்கேனும்
மூர்ச்சையாகிக் கிடக்கிறதோ என
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்
புத்துணர்வுடன் உற்சாகத்தோடு
பெருக்கெடுத்தது மனிதநேயம் !
பணம் இங்கே ஊமையாகிப் போக
மனங்கள் உரக்கப் பேசத் துவங்கின !
மதங்கள் அனைத்தும் மறந்து விட
உறங்கிக் கிடந்த மனித நேயம் விழித்தது !
உயர்வு தாழ்வென்பதெலாம் உயிர்களிடத்து மறைந்து
சமத்துவ நிலையை பிரகடணப் படுத்தியது மழை !
பெருக்கெடுத்த நேயம் தொடர்ந்தோடுமா ? - அல்லது
வற்றி வறண்டு விடுமா ?

Friday, February 19, 2016

நண்பர்களிடம் ஓர் பேருதவி வேண்டி....

ப்ரதிலிபி நடத்தும் கொண்டாடப்படாத காதல்கள் என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது கவிதை. கீழுள்ள சுட்டியில் எனது கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து, உங்கள் படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புக்கான இணைப்பு
http://tamil.pratilipi.com/p-tamizh-…/kondadapadadha-kaadhal

3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

Thursday, February 11, 2016

வெற்றிக்கான வழி

 

நாளும் மனதினுள்
எண்ணி எண்ணி
சிலாகித்து - மனக்
கண்ணில் காட்சியாய் விரிந்து
விழித்திரையில் நிறைவாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
இலட்சியக் கனவுகள் !
முழு மனத்துடன்
இலட்சிய எண்ணத்துடன்
ஆர்வம் மிகக் கொண்டு
எடுத்து வைக்கும் அடி -
சமயங்களில் பனிப் படிக்கட்டில்
வைத்த அடிகளாய்
காலுக்கடியில் நழுவிய போதும்
உள்ளமது வைரமென உறுதியானால்
தோல்வி பனிப்படியும் ஆகும்
வெற்றிக்கான படிக்கட்டாகவே !
உதாசீனமும் தோல்வி பயமும்
சற்றே மன உறுதியை ஆழம் பார்க்க
தன்னம்பிக்கை மட்டும் துணையாக கொண்டால்
அது அமைத்திடும் ஊக்கம் - உற்சாகமெனும்
பலமான அடித்தளம் !
முயற்சியும் பயிற்சியும் தாங்கும்
தூண்களாய் உறுதியாய் நிமிர்ந்து நிற்க
வெற்றிக் கதவும் தான் -
அகல விரிந்து காத்துக் கிடக்கும் !
புகழ் மாலைகளும் தோள் சேர
வரிசை கட்டி வந்து சேரும் !
Related Posts Plugin for WordPress, Blogger...