Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




அறியாமை எனும்

இருள்  நீங்கி
உள்ளங்களிலும்
இல்லங்களிலும்
இன்ப ஒளி
வெள்ளமென
பாய்ந்து
நிறைவினை
கொடுக்கட்டும் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

Monday, October 13, 2014

சிந்தனை திருட்டு

பிறரது சிந்தனையை திருடுதல் முறையோ ?

அல்லது ஒருவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களும் கருத்துக்களையும் கூட நகல் எடுத்து விடக்கூடிய அளவுக்கு இன்று விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ ? 

பதிவினை வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதை Copy செய்து தங்களது வலைப்பக்கத்தில் Paste செய்து விடுகிறார்களே ! இவர்களது சுறுசுறுப்புக்கு முன் எறும்பு கூட தோற்று விடும் போல் உள்ளதே !

கேள்வி எழுப்பினால், இத்தகையோரிடமிருந்து பதில் கிட்டுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எனது கவிதை புன்னகை ஒன்றே போதுமே !  இதனை, சிவராமா என்பவர், தனது  Mind Moulders Blog என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.அதற்கான இணைப்பு http://sivamindmoulders.blogspot.com/2014/05/blog-post_11.html. பதிவினை நான் வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதனை எடுத்து தன் வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறார்.

எனது கவிதையை வெளியிட்டு உள்ளாரே, எனது பெயர் , வலைப்பூ முகவரியையேனும் சேர்த்து கொடுத்திருக்கலாமே. அவரது வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இதேபோல், பலரது பதிவுகளை சேர்த்தே அந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கிறார். 


Related Posts Plugin for WordPress, Blogger...