Sunday, August 28, 2011

இயற்கை

இறைவனின் திறமையில் உருவான
கற்பனை  ஓவியம் ........ உலகம்....
இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை 
தனது உலக ஓவியத்தில் 
தீட்டி வைத்துள்ளான்..........
நீரோடையென........கடலென ......
மலையென...... நிலமென ........
நீரென.....காற்றென.....
அந்த வண்ண ஓவியத்தில்
நாமும் நடமாடும்
கதாபாத்திரங்கள்......
நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை
பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???
காத்திடுவோம் - இறைவன்
நமக்களித்த இயற்கையை.......
நம் பொக்கிஷமென......
விட்டுச் செல்வோம் - நம்
சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்........


http://www.vallamai.com/?p=30491

 

தாய்


உயிர் கொடுத்து 
உருக் கொடுத்து 
தன்னை மறந்து 
நம்மை மட்டுமே 
நினைந்து.......
உணவு உறக்கம் 
அனைத்தும் 
நமக்காக தியாகம் செய்து 
நம் வாழ்வே .....தன் வாழ்வாக்கி.....
நம்  சித்தமே..... தன் எண்ணமென மாற்றி 
நாம் பிறந்த நொடி முதல் 
தன் மூச்சு உள்ள வரை 
நமக்காக வேண்டும் தெய்வம்-

நிலா

மாசற்ற வெண்மையை 
உன்னகத்தே கொண்டதனால் 
வெண்ணிலா ஆனாய்...
நீ வளர்ந்து தேய்வதனால் 
வளர் மதி ஆனாய்....
மேகத் திரை விலக்கி 
எட்டிப்   பார்க்கும் வேளையில்    
பொன்மதியாய்.....                                                
இரவினில் வான் பார்த்து 
நான் நடக்க - என் 
துணையாக நீயும் 
வந்தாய்....என்
வழியெங்கும்-என் தோழியாய்!!!
http://eluthu.com/kavithai/38390.html 

மலர்கள்

இறைவன் வரைந்த 
இயற்கை ஓவியத்தில் 
பதிக்கப்பட்ட 
நவரத்தினக் கற்கள்.....
வண்ணமயமாய் உலகை 
அலங்கரிக்கின்றன!!!

Wednesday, August 24, 2011

நீர்வீழ்ச்சி

வான மகள் மேகக் கூந்தலை 
அவிழ்த்துப் போட்டிருக்கிறாள் போலும்...
அது வெண்மையாய் பால் போல 
நீர்வீழ்ச்சி என கொட்டுகிறது.....

வாழ்க்கை அகராதி


பிரிவு என்ற வார்த்தையும்
அழிவு என்ற வார்த்தையும்
இல்லாத ஒரு
நட்பு அகராதியை உருவாக்க
நாமும் எண்ணுகிறோம் நண்பர்களே....
ஆனால்....
காலம் என்னும் பேரகரதியினுள்
நம் வாழ்க்கை என்ற வார்த்தைக்கு
உறவு - பிரிவு என்பவையே
அர்த்தங்களாக உள்ளன.......
http://eluthu.com/kavithai/36675.html 

மெழுகுவத்தி



மெழுகை உடலாக்கி
திரியை உயிராக்கி
உலகிற்கு ஒளி கொடுக்க
உன்னையே அழித்துக் கொள்கிறாய்.....
யாரை எண்ணி
நீ இப்படி உருகி
உருக்குலைந்து போகிறாய்??
http://eluthu.com/kavithai/36674.html 

Thursday, August 18, 2011

வானவில்

வான வீதியில் நடக்கிறது
வண்ண ஊர்வலம்!!!
மேகமகள் மழைத் துளிக்கொண்டு
பன்னீர்  தெளிக்கிறாள் - உற்சாகமாய்.....
கதிரவனை வரவேற்க!!!
அவனது ஒளிக் கீற்றுகள்
பட்ட நொடியில்
விரிந்தது வானவில்!!
ஏழ் வண்ணங்களைக் கொண்டு
வானவீதியின் அலங்கார வளைவுகள் என!!!
நினைத்த நேரத்தில் காண முடியா
அதிசயமாய்- அசத்தும் ஆச்சர்யமாய்!!!
 கண நேரத்தில்  கண்களில் பட்டு மறையும்
ஒளி ஓவியமாய் !!!
உள்ளம் கொள்ளை கொள்ளும்
இயற்கையின் அதிசயம் - வானவில்!!!
http://eluthu.com/kavithai/36944.html 

Wednesday, August 17, 2011

மௌனம்!!!

வார்த்தைகளின் சப்தத்தை விட
ஆயிரம் மடங்கு
அதிகமாக ஒலிப்பது - மௌனம்!!!
நொடிப் பொழுதில் ஆயிரம்
வார்த்தைகளை பேசி விடுகிறது.....
உதடுகளின்று வரும்
வார்த்தைகளின் ஒளியை விட
உள்ளத்தினின்று வரும் வார்த்தை -
உண்மையானது- உன்னதமானது!!! 

http://eluthu.com/kavithai/35983.html 


கடிதம்

உள்ளங்களின் பிரதிபலிப்பை
எழுத்துக்களின் பிம்பமாக்கும்
அதிசய கண்ணாடி....
ஆயிரம் மைல்கள் அப்பால் சென்றாலும்
உறவை அருகே கொண்டுவரும்
உன்னத கருவி...
வாய் திறந்து பேச யோசிக்கும் நொடியில்
உள்ளம் திறந்து கொட்டிவிட உதவும்
அற்புதக் கண்டுபிடிப்பு....
கணினித் திரை காட்டாத
உள்ளத்து உணர்வுகளை ......
உண்மையாய் காட்டிவிடும் -
நாம் கைப்பட எழுதிய கடிதம்!!!! 

http://eluthu.com/kavithai/35982.html 

மழை

தன்மையை தன்னகத்தே கொண்ட 
 மழை அன்னை -கார்முகில் தேரில் 
பூமி நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் -
மண்ணின் மணம் பரப்ப!!!
அன்னையின் வரவை அறிவிக்க 
 மத்தளமென  இடி முழங்க 
வண்ண விளக்குகளென 
மின்னல் ஒளிபாய்ச்ச 
துளிகளாய் வருகிறாள் 
 மழை அன்னை.......
அவளின் வரவிற்காக 
காத்திருந்தது போன்று 
எங்கிருந்தோ ஓடி வந்து விட்டன-
தவளைக் கூட்டங்கள்.....
இன்னிசைக் கச்சேரியை ஆரம்பிக்க!!!
மழையைக் கண்டதும் அங்கங்கே 
காளான் குடைகள் விரிந்து நிற்கின்றன...
மரங்களும் சிலிர்ப்புற்று 
அசைந்தாடி நிற்கின்றன.......
வாருங்களேன் .....நாமும்
 மழையுடன் மகிழ்ந்திருப்போம் !!!

வானவில்!!!

மேகமகள் மழையை 
 பன்னீர் எனத்
தெளித்து 
கதிரவனை வரவேற்க 
அவனது  வருகையால் 
மழையை ஒளி குறுக்கிட்டு 
நின்ற நேரம்-மேகப் பெண்ணவள் 
வெட்கத்தால் வளைய 
அங்கு பிறந்தது 
வானவில்!!!
Related Posts Plugin for WordPress, Blogger...