Tuesday, November 27, 2012

கரைசேரா ஓடங்கள்



கண்ணின் இமையென
பாதுகாத்து நின்ற
தாயும் நினைவிற்கு
வரவில்லை !!!
உந்தன் உயர்வே
எந்தன் மனக்கனவு
என்றிருந்த தந்தையும்
மனக்கண் முன்
தோன்றவில்லை !!!
உனக்கு விட்டுக் கொடுக்கவே
எனது இந்த  அவதாரம்
என்றுரைத்த உடன் பிறப்பும்
மறந்து போய்விட்டது !!!
ஏனோ ??  
காதல் - கண்ணை
மறைத்து விட்டது !!!
வாழ்க்கை சமுத்திரம் கடக்க
காதல் ஓடம்  ஒன்றே
போதுமென்றெண்ணி விட....
ஓடமும் தான் சென்றது -
நீரின் மேல்
மெல்லிறகாய் சிலகாலம் !!!
தென்றலில் மட்டுமே
அசைந்தாடிப் பழகியிருந்தபடியால்
புயலைக் கண்டதும்
நிலை தடுமாறிட .....
தத்தளித்து நின்று
கரை சேர நினைத்த போது தான்
தெரிந்தது - தான் நிற்பது
நடுச் சமுத்திரத்தில் என்று !!!
சமுத்திரத்தில் மூழ்கி
முத்தெடுக்கவும் முடியவில்லை .....
கரை தேடி ஒதுங்கவும்
இயலவில்லை ......
வாழ்வும் இங்கு
தள்ளாடுது - கரை சேரா ஓடமாய் !!!

http://www.vallamai.com/literature/poems/29112/ 

Wednesday, November 21, 2012

துளிர்!

கையிலிருக்கும் அட்சயப்  பாத்திரத்தின்
பெருமை உணராது – அலட்சியமாய்
ஒடித்தெறிந்து விட
இன்றோ – பிச்சைப் பாத்திரம்
ஏந்தி நிற்கிறோம் !!!
மரங்களை வெட்டி
எறிந்தோம் – தூய்மையான
சுவாசக் காற்றைத் தேடி
யாசகர்களாய் அலைகிறோம் !!!
பாவிகளை இரட்சிக்கும்
தேவ தூதன் என –
நமக்காய் மீண்டும் மண்ணில்  –
புத்தம் புது துளிராய் !!!
புது நம்பிக்கையுடன் …………
புது உற்சாகத்துடன் ……..
தன்னலமில்லா மனத்துடன்
ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!

http://www.vallamai.com/literature/poems/28886/ 
Related Posts Plugin for WordPress, Blogger...