Thursday, May 31, 2012

காணிக்கை




உள்ளம் உருகும்
இசை மீட்டிய
பியானோவின் இசைக்கு
இங்கு மலரும்
தன்னை காணிக்கையாக்கியதோ???

http://pullaankulal.blogspot.com/2012/05/8.html 

மையல்



உள்ளமதில் வழிந்தோடும்
எண்ண அலைகளுக்கு
வார்த்தைகளால் வடிவம்
கொடுத்து - இசை கொண்டு
மெருகேற்றி
காற்றில் கலந்து வரும் கானமென
வானொலிப் பெட்டியும் 
இசைத்திட - ஆசை
ஊஞ்சலதில் பருவமும்
அசைந்தாட - மையலில்
மயங்கிச் சிரிக்கிறாள்
இளமாது!!!

http://pullaankulal.blogspot.com/2012/05/7.html 

மாறாத வடுக்கள்..



உள்ளத்து தேங்கி கிடக்கும்
துன்பச் சுவடுகளை
குப்பைகளென துப்புரவு செய்து
சிந்தனைகளின்று அகற்றி விட்டு
மகிழ்ச்சி விளக்கதை ஏற்றிய போதும்
நையாண்டியாய் வந்து விழும்
ஒரு சுடுசொல் - ஏற்படுத்தி விடுமே
உள்ளமதில் -
மாறாத வடுக்களை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=81 

Friday, May 4, 2012

நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.



தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டதா
எனும் நிலை வந்ததோ??

Related Posts Plugin for WordPress, Blogger...