Tuesday, June 12, 2012

ஊர்வலத்திலோர் அத்துமீறல்!!!


ஒழுக்கத்துடன் சீராய்
நடக்கிறது ஓர்
அழகு ஊர்வலம் !!!
திடீரென்று அதிரடியாய்
ஆங்கோர் அத்துமீறல் !!! -
அமைதியாய் செல்லும்
எறும்பு கூட்டத்தின்
நடுவே ராட்சசப் பாதமென
ஓர் மனிதனின்
காலடி!!!

link 

சிரிப்பு

உள்ளத்து பாரங்களை
மென்மையாக்கும் கவிதை !!!

மொழியறியா குழந்தையின்
முதல் ஆசை மொழி !!!

ஆக்கப்பூர்வத்தின் முதல்
படி !!!


இதயங்கள் பேசிக் கொள்ளும்
மௌன மொழி !!!
உள்ளங்களை வசீகரிக்கும்
ஒயில் ஓவியம் !!!
இரும்பு  இதயங்களை
ஈர்க்கும் காந்தம் !!!
உலகையே கைக்குள்
சேர்க்கும் அற்புதம் -
சிரிப்பு !!!!

link


ஐஸ் வண்டி


எத்தனை முறை கேட்டாலும்
வாங்கித் தர முடியாது -
என்று அன்னையவள்
அதட்டி உருட்டினாலும்
உள்ளத்தில் உற்சாகம்
தரத் தவறியதில்லை -
அன்றாடம் தெருவில் செல்லும்
ஐஸ் வண்டி !!!
link

Friday, June 8, 2012

Facebook (முகநூல் )

அருகிருக்கும் உறவுகளின்
பாசம் மறந்து -
முகமறியாதோரின் நேசம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
மூடர்களின் உலகம் - முகநூல்!!!



நிஜமும் நிழலும்
பிரித்தறிய இயலாது
பின்னிப் பிணைந்து
விரவிக் கிடக்கும்
மாய வலையுலகம் - முகநூல்!!!

Wednesday, June 6, 2012

கிள்ளையின் துயில்



உறக்கமது கண்ணைத்
தழுவ - கனவதனில்
இறைவனும் கைகோர்த்து
விளையாட - பட்டு
மஞ்சமதும் மலர்
மஞ்சமாக - தனை மறந்து
துயிலுகிறது
சின்னஞ்சிறு  கிள்ளை!!!

http://pullaankulal.blogspot.com/2012/05/10.html 

பூட்டு



தனக்குத்தானே வேலியிட்டு
அடைந்து கொண்டிருக்கும்
மனம் - பல நாட்கள்
இடமொன்று கதவடைத்து
போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....
கதவு திறந்தால்
வெளிச்சம் கிடைக்கும்....
மனம் திறந்தால்
தெளிவு பிறக்கும்...

http://pullaankulal.blogspot.com/2012/05/9.html 
Related Posts Plugin for WordPress, Blogger...