Thursday, December 27, 2012

மின்வெட்டு !!!




ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான்
உதவாமல் போய்விட
கைகொடுப்பது பனையும்
தென்னையும்  தான் - விசிறிகளாய் !!!

கிரைண்டரும் மிக்சியும்
ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்
துள்ளியோடி வந்து வாசலை
அலங்கரிக்குது - அம்மியும் ஆட்டுரலும் !!!

குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே
காத்திருந்த காலம் மாறி
கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்
ஆரோக்கியத்துடன் - மண்பானைகள் !!!

டிவியில் லயித்து - உலகை மறந்திருந்தோர்
இப்போது சுற்றியிருப்போரின்
முகங்களில் சிரிப்பினைப்
பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!

கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு
இப்போது  மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ....
தாயமும் பரமபதமும் - கண்ணாமூச்சியும்
தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!

செயற்கையோடு செயற்கையாகவே
வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு
இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை
நமக்கு கற்றுத் தருகிறது - மின்வெட்டு !!!

http://www.vallamai.com/literature/poems/30013/
http://www.vaarppu.com/view/2689/
http://tamilauthors.com/03/503.html 

Sunday, December 16, 2012

தொலைதூரக் காதல்!



உன் நினைவுகளில் நானும்
என் நினைவுகளில் நீயும்
நீங்காது நிலைத்திருக்க
தூரமும் தொலைவும் தான்
காதலை பிரித்திடுமா என்ன ???

அருகாமையும் அரவணைப்பும்
உணர்த்தாத காதலை
பிரிவும் தொலைவும்
தெள்ளத் தெளிவாய்
படம் பிடித்துக் காட்டிடாதோ ???

அனுதினமும் வளர்ந்திடுமே 
அளவிலா   காதலும் ....
பிரிவதுவும் ஏற்படுத்துமே
ஆழமான வலுவான
அன்பின்  அஸ்திவாரம் !!!

உந்தன் அன்பின் அருமையை
எனக்கும் ......எந்தன் -
காதலின் வலிமையை
உனக்கும் ......உணர்த்திடாதோ ???
இந்த தொலைதூரக் காதல் !!!

http://www.vallamai.com/literature/poems/29825/ 
Related Posts Plugin for WordPress, Blogger...