Tuesday, May 24, 2011

பெண்

உயிர் கொடுத்து 
ஊண் வளர்க்கும் 
பொழுது - தாயாய் 
ஈடிணையில்லா தியாகம்!!

எண்ணங்களின் வடிகாலாய்
கனவுகளின் உருவமாய் 
எண்ணும் போது -மகளாய் 
அளவில்லா பாசம்!!!

மென்மையாய் உரிமை கொண்டு
கண்டிப்பால் வழிநடத்தும் 
நேரத்தில் - சகோதரியாய் 
என்றும் மாறா ஆதரவு!!!

தன்னுயிரில் பாதியாக 
தன் துணையை 
கொண்ட போது - மனைவியாய்
கபடமில்லா காதல்!!!

 எதிர்வரும் சவால்களை 
துணிச்சல் கொண்டு 
எதிர் நோக்கும் போது 
உலகின் சக்தியாய் - புதுமைப் பெண்!!!
http://eluthu.com/kavithai/46182.html 

Thursday, May 19, 2011

மெழுகுவர்த்தி

 
மௌனமாய் கரைகிறேன்...
உருகி வழிந்தோடுகிறேன்.....
திரியை உடலாக்கி 
மெழுகை உயிராக்கி
ஒளி கொடுக்க 
 உடலைக் கொழுத்தி 
உயிரைக் கரைத்துக் 
கொண்டிருக்கிறேன்.....


 

Related Posts Plugin for WordPress, Blogger...