Monday, November 30, 2015

சூன்யமாக்கிடும் மது !



சிந்தையை சிறைப்படுத்தி
தன்னிலை மறக்கடித்து
மதிப்பையும் தானழித்து
எண்ணம் - வண்ணம் எல்லாம்
குழம்பிப் போய் - பேசும்
வார்த்தைகளும் நிலை தடுமாற
நடையிலும் தள்ளாட்டம் சேர்ந்திட
சுற்றம் சூழ்நிலை மறந்த நிலையில்
ஊர் உலகுக்கு காட்சிப்  பொருளாக்கி
தன்மானத்திற்கும் மரியாதைக்கும்
தானே இட்டுக் கொண்ட கொள்ளியாய்
சுட்டெரித்து சூன்யமாக்கிடும் - மது !

 தினமணி கவிதைமணி பகுதியில் அக்டோபர் 19ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.
http://www.dinamani.com/kavithaimani
Related Posts Plugin for WordPress, Blogger...