Friday, September 28, 2012

மரணம் தின்ற நட்பு

புல்லின் நுனிதனில் அமர்ந்து -
அதனுடன் சிரித்து அளவளாவி
மகிழ்ந்திருந்த பனித்துளி...
நொடிகளில்  மரணத்தை தழுவியது....
இது என்ன?? - மரணம்
தின்று விட்ட நட்போ??
அடர்ந்த மரத்தின் கிளைதனை
நட்புடன் நாடிநின்ற இலையும்
உதிர்ந்த நொடியதில் - அங்கு
இலையும் கிளையும்
கொண்டிருந்த நட்பினை
மரணம் தின்றுவிட்டதோ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=83 

Monday, September 10, 2012

உன் அழகில் தொலையும் நான்

அலையின் அலைக்களிப்பிற்கேற்ப
அசைந்தாடும் ஓடம் -
சென்றிடுமே நீர் செல்லும் வழி எல்லாம் !!!
காற்றின் இசைக்கேற்ப
நீரின் மேல் நடனமாடும் !!!
இயற்கையின் அழகதனை
இன்பமாய் ரசித்திட
நமக்கு வழிகாட்டியாய்.....
நம்முடன் துணைவனாய் !!!
ஓடமே.... உன்
அழகில் தொலைகிறேன் நான் !!!
ஆம் - பிறர் மனம் மகிழ்ந்திட
நீயே ஆகிறாய் -
ஓர் கருவியாய் !!!
உன் தன்னலமில்லா
உள்ளத்தின் - கள்ளமில்லா
அழகில் தொலைகிறேன் நான் !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=82 
Related Posts Plugin for WordPress, Blogger...